» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பசுமை சாம்பியன் விருது, தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு: ஆட்சியர் அழகுமீனா வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 5:27:34 PM (IST)

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட தனிநபர் மற்றும் அமைப்புகளுக்கு, தமிழ்நாடு அரசின் 'பசுமை சாம்பியன்' விருதுகளை மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா இன்று வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ஸ்டாலின்,முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆட்சியர் தெரிவித்ததாவது: "தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகளைக் கண்டறிந்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆண்டுதோறும் 100 பேருக்கு 'பசுமை சாம்பியன் விருது' வழங்கி கௌரவித்து வருகிறது.
இந்த விருதுடன் தலா ரூ. 1 லட்சம் பண முடிப்பும் வழங்கப்படுகிறது. 2025-ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதினைப் பெறத் தகுதி பெற்ற ஜெகதீசன் (தனிநபர் பிரிவு), இயற்கையே இறைவன் பனை விதைப்பு குழு (அமைப்பு), ஒற்றையால்விளை அரசு மேல்நிலைப்பள்ளி (கல்வி நிறுவனம்)ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தலா ரூ. 1 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்:
விருது பெற்றவர்களை மனதாரப் பாராட்டிய மாவட்ட ஆட்சியர், இனிவரும் காலங்களிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கூடுதல் அக்கறையுடனும், சமூகப் பொறுப்புடனும் விழிப்புணர்வுப் பணிகளைத் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ம. நெல்லைமதி, பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாரத்நெட் திட்டத்தில் தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு: நிதி தகுதி தளர்வு - ஆட்சியர் தகவல்!
சனி 14, மார்ச் 2026 5:38:31 PM (IST)

சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருது : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 10:59:20 AM (IST)

நெல்லையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது!
சனி 14, மார்ச் 2026 8:43:47 AM (IST)

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, தேர்தல் கூட்டங்கள் : அரசியல் கட்சிகளுடன் ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 13, மார்ச் 2026 5:41:13 PM (IST)

குரூப் 2 முதன்மை தேர்வுக்கு 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி கிடையாது: ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 13, மார்ச் 2026 12:53:27 PM (IST)

இளம்பெண் தலை துண்டித்து கொடூர கொலை: நடத்தை சந்தேகத்தால் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 13, மார்ச் 2026 8:32:53 AM (IST)

