» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வாக்காளர்களுக்கு விநியோகிக்க ரூ.200 கோடி பதுக்கலா? நெல்லையில் அதிகாரிகள் அதிரடி சோதனை!
புதன் 8, ஏப்ரல் 2026 5:20:34 PM (IST)
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ரூ. 200 கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அங்கு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 5-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்கத் தேர்தல் ஆணையம் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதற்காகத் தமிழகம் முழுவதும் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், நெல்லை பாளையங்கோட்டை தொகுதிக்குட்பட்ட பெருமாள்புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக சுமார் ரூ. 200 கோடி ரொக்கப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் பறக்கும் படையினருக்கு இன்று காலை ரகசியத் தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் குவிந்தனர். அங்குள்ள வீடுகளில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் குறிப்பிட்ட இடம் குறித்துத் தெளிவானத் தகவல் இல்லாததால், அந்த அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், சோதனையைத் தடையின்றி நடத்தவும் குடியிருப்பைச் சுற்றிலும் ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பெரிய அளவிலான தொகை பதுக்கப்பட்டிருப்பதாக எழுந்த இந்தத் தகவல், பாளையங்கோட்டை மற்றும் நெல்லை மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்குப்பதிவு நாளன்று தொழிலாளர்களுக்கு ஒருநாள் ஊதியத்துடன் விடுமுறை : ஆட்சியர் தகவல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 4:10:16 PM (IST)

நண்பகலில் வெளியில் செல்வதை தவிர்க்கவும்: பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 12:28:42 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி: தேர்தல் பார்வையாளர்கள், ஆட்சியர் ஆய்வு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 10:33:24 AM (IST)

நெல்லையில் தேர்தல் பணிகள் தீவிரம்: வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ஆம் கட்டப் பயிற்சி!
புதன் 15, ஏப்ரல் 2026 4:16:15 PM (IST)

தோரணமலையில் விவசாயிகளுக்குக் கௌரவம்; சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா!
புதன் 15, ஏப்ரல் 2026 10:22:23 AM (IST)

திட்டமிட்ட துப்பாக்கிச் சூடா? - சிசிடிவி காட்சிகளால் ஆலங்குளம் விவகாரத்தில் திடீர் திருப்பம்!
செவ்வாய் 14, ஏப்ரல் 2026 11:04:49 AM (IST)

