» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: டீ மாஸ்டருக்கு 16 ஆண்டு சிறை – போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 1, மே 2026 8:50:14 AM (IST)
சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த டீ மாஸ்டருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நெல்லை அருகே பேட்டை செக்கடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார் (41). இவர் அப்பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2024-ஆம் ஆண்டு, 6 மற்றும் 7 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து சிறுமிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து முத்துகுமாரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் நேற்று தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட முத்துகுமாருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளின் குடும்பத்தினருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் அரசு இழப்பீடாக வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் உஷா ஆஜராகி வாதாடினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வங்கிப் பெண் ஊழியர் நடுரோட்டில் சரமாரி வெட்டிக் கொலை: நெல்லையில் கொடூரம்!
ஞாயிறு 17, மே 2026 11:28:21 AM (IST)

வெள்ள பாதிப்புகளைத் தடுக்கப் போர்க்கால நடவடிக்கை : ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் உத்தரவு!
சனி 16, மே 2026 11:07:43 AM (IST)

சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக இபிஎஸ் ஆதரவாளர்கள் நூதன போராட்டம்!
வெள்ளி 15, மே 2026 11:27:59 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)


