» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு 8-ஆம் ஆண்டு நினைவு நாள்: முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மலர் அஞ்சலி!
வெள்ளி 22, மே 2026 3:22:33 PM (IST)

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, வடக்கு மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான கீதா ஜீவன் அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் போது, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே 13 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இந்தத் துயரச் சம்பவத்தில் பலியான 15 பேரின் 8-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் உத்தியோகப்பூர்வ அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 15 பேரின் திருவுருவப் படங்களும் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில் மலர் அஞ்சலி செலுத்திய பின், முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் நிர்வாகிகளிடையே பேசியதாவது: "கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான காவல்துறை, போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை எவ்வித ஈவு இரக்கமுமின்றிச் சுட்டுக் கொன்றது. மேலும், பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பங்களுக்கு முறையாக அரசு வேலைகளையும் வழங்காமல் அப்போதைய அரசு அலைக்கழித்தது.
ஆனால், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்ததும், அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், தகுதியின் அடிப்படையில் முறையாக அரசு வேலைகளை வழங்கி அவர்களுக்கு உன்னத முறையில் உறுதுணையாக இருந்து வந்தார்."
இதனைத் தொடர்ந்து, வரும் காலங்களிலும் திமுக-விற்குத் துணையாகவும், அரணாகவும் நிற்க அனைவரும் சபதம் ஏற்பதாகத் திமுக நிர்வாகிகள் உத்தியோகப்பூர்வமாக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், மாநகர துணைச்செயலாளர் கீதா முருகேசன், தூத்துக்குடி மாநகராட்சித் துணை மேயர் ஜெனிட்டா, மண்டலத்தலைவர் கலைச்செல்வி, மாவட்ட அணி அமைப்பாளர் கவிதாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், அருணாதேவி, பெனில்டஸ், மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமார், பழனி, மாநகர அணி அமைப்பாளர்கள் அருண்குமார், வழக்கறிஞர் கிறிஸ்டோபர் விஜயராஜ், முருகஇசக்கி, அணி துணை அமைப்பாளர்கள் வினோத், ரவி, டினோ, மணிகண்டன், சத்யா, செந்தில்குமார், கருப்பசாமி, குமரன், இந்திரா, மாவட்ட பிரதிநிதிகள் சேர்மபாண்டியன், நாராயணன், செல்வக்குமார், பகுதி செயலாளர்கள் நிர்மல்ராஜ், சுரேஷ்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
ஸ்ரீநாத்மே 22, 2026 - 04:44:39 PM | Posted IP 104.2*****
மக்கள் போராட்டமா? அட பன்னாடை மக்களா கலவரம், வெறியாட்டம், பொதுமக்கள் உடமைகள் சூறை, அரச மருத்துவமனை மீது கொலை வெறி தாக்குதல், பொது சொத்துகள் தீவைத்து எரிப்பு, டாக்டர்கள், காவல்துறையினர் மீது வன்முறை தாக்குதல், கலெக்டர் அலுவலகம் எரிப்பு, தீவைப்பு. இதுபோன்ற தியாக செயல்களில் ஈடுபட்ட விருந்தாளிக்கு பிறந்த நாய்கள் யார்? அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. இனியும் முதல்வர் விஜயின் சொந்தக்காரர்கள் மிது எப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கேடு கெட்ட நாய்கள் இனி தியாகிகளாக அறிவிக்கப்பட்டு பள்ளி கல்லூரி பாடங்களில் வருவார்கள். அடுத்த தலைமுறை எதை நம்பும்
மேலும் தொடரும் செய்திகள்

காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: 3 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்!
சனி 23, மே 2026 8:56:35 AM (IST)

தேசிய டிஜிட்டல் கால்நடை இயக்கம்: கால்நடைகளின் விபரங்களைப் புதுப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தல்!
வெள்ளி 22, மே 2026 5:47:46 PM (IST)

கொக்கிரகுளத்தில் புதிய ஆதார் சேவை மையம் : ஆட்சியர் இரா.சுகுமார் திறந்து வைத்தார்
வியாழன் 21, மே 2026 4:38:35 PM (IST)

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீண்..? மண்டல மேலாளர் மறுப்பு; 2 பேர் பணிநீக்கம்!
வியாழன் 21, மே 2026 11:20:26 AM (IST)

விவிபேட் இயந்திரங்களின் பேப்பர் ரோல்களை அகற்றும் பணி: ஆட்சியர் இரா.சுகுமார் நேரில் ஆய்வு!
செவ்வாய் 19, மே 2026 5:50:43 PM (IST)

வங்கிப் பெண் ஊழியர் நடுரோட்டில் சரமாரி வெட்டிக் கொலை: நெல்லையில் கொடூரம்!
ஞாயிறு 17, மே 2026 11:28:21 AM (IST)



ஸ்ரீநாத்மே 22, 2026 - 04:46:32 PM | Posted IP 104.2*****