» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஸ்டார் 3.0 மென்பொருள் கலந்துரையாடல்: பத்திரம் எழுத்தர்களுக்குச் சார் பதிவாளர் ஆலோசனை!
சனி 11, ஜூலை 2026 8:12:23 PM (IST)

கல்லிடைக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஸ்டார் 3.0 மென்பொருள் குறித்த ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பதிவுத்துறையில் 3.0 மென்பொருள் வழியாக இணைய வழி பத்திரப்பதிவு நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இப்புதிய இணைய வழி பத்திரப்பதிவு நடைமுறையை முறையாகப் பின்பற்றிப் பத்திரம் பதிவு செய்வது குறித்துக் கல்லிடைக்குறிச்சி சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆலோசனைக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில், பத்திரம் எழுத்தாளர்கள் மற்றும் கணினி உதவியாளர்களுக்குச் சார் பதிவாளர் பி.சுதாகர் குமார் விரிவான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார். இக் கலந்துரையாடல் கூட்டத்தில் பத்திரம் எழுத்தர்கள், வழக்குரைஞர்கள், கணினி உதவியாளர்கள், சார் பதிவாளர் அலுவலகப் பணியாளர்கள் கலந்துகொண்டு புதிய மென்பொருள் செயல்பாடுகள் குறித்துக் கேட்டறிந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பதவிப் பிரமாணத்திற்கு எதிரான குற்றம்: முதல்வர் விஜய்க்கு அப்பாவு கண்டனம்!
சனி 11, ஜூலை 2026 5:15:59 PM (IST)

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கணவன், மனைவி உள்பட 72 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது!
சனி 11, ஜூலை 2026 12:02:46 PM (IST)

திருமாவளவன் குறித்த நோபல் பரிசு கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்: வைகோ பேட்டி!
வெள்ளி 10, ஜூலை 2026 8:49:57 AM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா துவக்கம்: 12-ஆம் தேதி வளைகாப்பு உற்சவம்!
வெள்ளி 10, ஜூலை 2026 8:37:22 AM (IST)

நெல்லையில் ரூ.15,037 கோடியில் சோலார் ஆலை: முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்
வியாழன் 9, ஜூலை 2026 3:48:41 PM (IST)

ரெட்டியார்பட்டி ஆவின் தலைமை அலுவலகத்தில் ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு!
வியாழன் 9, ஜூலை 2026 11:38:46 AM (IST)


