» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
போலி ஆவணம் தயாரித்து விமானப்படை அதிகாரி நிலம் மோசடி: தம்பதி உட்பட 3 பேர் கைது!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:38:10 AM (IST)
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட தம்பதி உட்பட 3 பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பாளையங்கோட்டை பாரதிநகரைச் சேர்ந்தவர் டாக்டர் முத்துமணி. இத் தந்தை இந்திரஜித், இந்திய விமானப்படையில் அதிகாரியாகப் பணியாற்றியவர். நான்கு யுத்தங்களில் பங்கேற்ற காரணத்தால் இவருக்கு வீரவநல்லூர் பகுதியில் 1 ஏக்கர் 67 சென்ட் நிலத்தை அரசு வழங்கியிருந்தது. இந்திரஜித் 1994 ஆம் ஆண்டு காலமானார்.
இத் நிலத்தை வாரிசுகள் தங்கள் பெயருக்கு மாற்ற முயன்றபோது, சார்பதிவாளர் அலுவலக முறைகேடு மூலம் வேறு சிலர் போலி ஆவணங்கள் தயாரித்துப் பதிவு செய்திருப்பது வில்லங்கச் சான்று வழியாகத் தெரியவந்தது.நிலம் அபகரிக்கப்பட்டது குறித்து டாக்டர் முத்துமணி நெல்லை மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குளியைச் சேர்ந்த மாரியப்பன், இத் மனைவி சரவணத்தம்மாள் மற்றும் கோடரங்குளத்தைச் சேர்ந்த லட்சுமி ஆகிய மூவரும் இணைந்து போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரித்தது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாரியப்பன், சரவணத்தம்மாள், லட்சுமி ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் 3 முறை விசில் ஊதிய த.வெ.க. கவுன்சிலர் இடைநீக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:57:59 AM (IST)

நெல்லை மருத்துவமனையில் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை: அசாம் இளைஞர்கள் 2 பேர் கைது!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 9:34:33 PM (IST)

நெல்லையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:56:38 PM (IST)

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)


