» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குற்றாலத்திலிருந்து பாபநாசம் சென்றபோது விபத்து: சுற்றுலா பயணி பரிதாப பலி; 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 12, ஜூலை 2026 11:48:25 AM (IST)

கடையத்தில் வேன் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஈரோட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 10 பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி கரட்டாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் 25 பேர் வேன் மூலம் தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்குச் சுற்றுலா வந்திருந்தனர். அங்கு அறை எடுத்துத் தங்கி அருவிகளில் குளித்த பின், குழுவிலிருந்து 11 பயணிகள் மட்டும் வேனில் பாபநாசத்திற்குப் புறப்பட்டனர். வாகனத்தைக் கொடுமுடி தாமரைப்பாளையம் பகவதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகன் சக்திவேல் ஓட்டினார்.
வேன் கடையம் அய்யம்பிள்ளைக்குளம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் தலைகீழாகக் கவிழ்ந்தது. விபத்து தொடர்பான தகவலறிந்த கடையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இவர்களுடன் அப்பகுதிப் பொதுமக்களும் இணைந்து வேனில் படுகாயமடைந்தவர்களை மீட்டனர்.
வாகனத்தின் கீழ் பயணி ஒருவர் சிக்கியிருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாகப் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு வேன் தூக்கி நகர்த்தப்பட்டபோது, வாகனத்தின் கீழ் சிக்கியிருந்த பயணி தலை நசுங்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. விசாரணையில், உயிரிழந்தவர் ஈரோடு மேட்டுக்கடை வேப்பமலை பிரதான சாலை பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மகன் சரவணன் என்பது தெரியவந்தது.
இவ்விபத்தில் கரட்டாம்பாளையத்தைச் சேர்ந்த சாந்தகுமார், மதுபாலன், கீர்த்தி குமார், மனோகரன், மகேஷ், கொடுமுடியைச் சேர்ந்த உதயகுமார், ராஜேஷ்குமார், கிருபாகரன் உள்ளிட்ட 10 பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காகத் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாகக் கடையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் 3 முறை விசில் ஊதிய த.வெ.க. கவுன்சிலர் இடைநீக்கம்!
செவ்வாய் 11, ஆகஸ்ட் 2026 7:57:59 AM (IST)

நெல்லை மருத்துவமனையில் பெண் ஊழியருக்குப் பாலியல் தொல்லை: அசாம் இளைஞர்கள் 2 பேர் கைது!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 9:34:33 PM (IST)

நெல்லையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் தொடங்கி வைத்தார்.
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:56:38 PM (IST)

அழகியபாண்டியபுரத்தில் பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவை : ஆர்.எஸ். முருகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்!
சனி 8, ஆகஸ்ட் 2026 8:09:04 PM (IST)

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை- நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 5:15:48 PM (IST)

கொலை வழக்கில் ராக்கெட் ராஜா உட்பட 11 பேர் விடுதலை: திருநெல்வேலி நீதிமன்றம் தீர்ப்பு!
வெள்ளி 7, ஆகஸ்ட் 2026 12:36:24 PM (IST)


