» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

அரசு எந்தவொரு நல்ல திட்டத்தையும் திமுகவினர் செய்ய விடுவதில்லை : அமைச்சர் ஸ்ரீநாத் குற்றச்சாட்டு

சனி 22, ஆகஸ்ட் 2026 8:32:58 AM (IST)

StartuptutySrinath.jpg

அரசு எந்தவொரு நல்ல திட்டத்தைச் செயல்படுத்த நினைத்தாலும் திமுகவினர் அதைச் செய்ய விடுவதில்லை என்று அமைச்சர் ஸ்ரீநாத் குற்றம்சாட்டினார். 

தூத்துக்குடியில் ‘தூத்துக்குடியில் இருந்து உலகம்’ என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் நடைபெற்ற தேசிய ஸ்டார்ட்அப் உச்சி மாநாடு மற்றும் அகில இந்திய தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு 2026 சிறப்பாக நிறைவடைந்தது.

நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் அமைச்சர் ஆ. ஸ்ரீநாத் கலந்துகொண்டு, புதிய தொழில் முனைவோர்களின் சாதனைகளைப் பாராட்டிச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் தெரிவித்தது: சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குக் கார் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், திமுகவைச் சேர்ந்த 59 உறுப்பினர்கள் தங்களுக்குக் கார் வேண்டாம் எனக் கூறி வருகின்றனர். 

அரசு எந்தவொரு நல்ல திட்டத்தைச் செயல்படுத்த நினைத்தாலும் திமுகவினர் அதைச் செய்ய விடுவதில்லை. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில உறுப்பினர்கள், பிற உறுப்பினர்களைச் 'சங்கி' எனக் கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அனைவரும் சட்டப்பேரவையில் எதையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் உள்ளோம்.


மக்கள் கருத்து

BalaAug 22, 2026 - 09:45:42 AM | Posted IP 104.2*****

sangi ya sanginu sollama songina solla mudiyum...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory