» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மணல் திட்டில் கார் மோதி விபத்து: 6 பேர் காயம்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:19:18 AM (IST)
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து மணல் திட்டின் மீது மோதிய விபத்தில், காரில் பயணித்த 6 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
அருப்புக்கோட்டையிலிருந்து திருநெல்வேலி நோக்கி 'இன்னோவா' கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரை திருநெல்வேலி கே.டி.சி. நகரைச் சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வெம்பூர் அருகே பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
எதிர்பாராத விதமாக கார், மேம்பால வேலை காரணமாக அமைக்கப்பட்டிருந்த மாற்றுப் பாதையில் திரும்பாமல், நேராகச் சென்று சாலையிலிருந்த மணல் திட்டின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் பயணித்த 6 பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.
அவர்கள் அனைவரும் அதே காரில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினர். இச்சம்பவம் குறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)

காவல் நிலையத்தில் வாலிபர் தற்கொலை முயற்சி : தலைமை காவலர் உள்பட 2பேர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:31:58 AM (IST)

திருநெல்வேலியில் செப். 19-ல் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்!
சனி 22, ஆகஸ்ட் 2026 11:09:15 AM (IST)

ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: வழக்கறிஞர் அதிரடி கைது!
சனி 22, ஆகஸ்ட் 2026 8:55:08 AM (IST)

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:53:39 PM (IST)


