» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

மணல் திட்டில் கார் மோதி விபத்து: 6 பேர் காயம்!

சனி 22, ஆகஸ்ட் 2026 11:19:18 AM (IST)

மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து மணல் திட்டின் மீது மோதிய விபத்தில், காரில் பயணித்த 6 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

அருப்புக்கோட்டையிலிருந்து திருநெல்வேலி நோக்கி 'இன்னோவா' கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரை திருநெல்வேலி கே.டி.சி. நகரைச் சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் வெம்பூர் அருகே பாலப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எதிர்பாராத விதமாக கார், மேம்பால வேலை காரணமாக அமைக்கப்பட்டிருந்த மாற்றுப் பாதையில் திரும்பாமல், நேராகச் சென்று சாலையிலிருந்த மணல் திட்டின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் பயணித்த 6 பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன.

அவர்கள் அனைவரும் அதே காரில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினர். இச்சம்பவம் குறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory