» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

விநாயகர் கோவில் இடிப்பைக் கண்டித்து பாஜக, இந்து அமைப்புகள் போராட்டம் - குரும்பூரில் பரப்பரப்பு!

ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 9:28:45 AM (IST)

Kurumpooraptam.jpg

குரும்பூர் ரயில் நிலையம் அருகே இருந்த விநாயகர் கோவில் அகற்றப்பட்டதைக் கண்டித்து, அதே இடத்தில் கோவிலை மீண்டும் கட்டி விநாயகர் சிலையை மறுபிரதிஷ்டை செய்யக் கோரி பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் ரயில் நிலையம் அருகே பல ஆண்டுகளாக வழிபாட்டில் இருந்து வந்த விநாயகர் கோவில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலையில் இடித்து அகற்றப்பட்டது. பக்தர்களின் வழிபாட்டில் இருந்த கோவில் இடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

பல்லாண்டுகளாகப் வழிபாட்டில் இருந்த கோவில் அகக்கம் செய்யப்பட்டது பக்தர்களின் மத உணர்வுகளைப் பெரிதும் புண்படுத்தும் செயல் எனக் கூறி, இடிக்கப்பட்ட விநாயகர் கோவிலை உடனடியாக அதே இடத்தில் மீண்டும் கட்டி, விநாயகர் சிலையை முறைப்படி மறுபிரதிஷ்டை செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

விநாயகர்Aug 23, 2026 - 04:54:42 PM | Posted IP 172.7*****

கதை கேட்டேன்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory