» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
முதல்வர் விஜய்யின் ஆட்சியைக் கவிழ்க்கப் பெரும் சதி: கோவில்பட்டியில் வைகோ குற்றச்சாட்டு
புதன் 26, ஆகஸ்ட் 2026 8:31:19 PM (IST)

தமிழக முதல்வர் விஜய்யின் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியைக் கவிழ்க்கப் பெரும் சதி நடப்பதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
கோவில்பட்டியில் நடைபெற்ற மதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் என்பவரது மகனின் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது: "ஊழலை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற நன்னோக்கோடு முதல்வர் விஜய் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார். ஆனால், அரசுத்துறைகளில் கோடிக்கணக்கில் ஊழல் செய்த சில அதிகாரிகள், தவெக ஆட்சியை ஸ்தம்பிக்கச் செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
அவர்கள் முக்கியமான கோப்புகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தாமல் முடக்கி வைக்கின்றனர். இத்தகைய செயல்பாடுகளில் ஈடுபடும் அதிகாரிகளைப் உடனடியாகப் பணியிலிருந்து விடுவித்துவிட்டு, அவர்களுக்குப் பதிலாக நேர்மையான அதிகாரிகளைப் பணியில் நியமிக்க வேண்டும்" என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்; 7 பேர் கைது!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:39:29 PM (IST)

திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 11:57:39 AM (IST)

மதுபோதை தகராறில் வெறிச்செயல்: வாலிபரை வெட்டிக்கொன்ற 3 சிறுவர்கள் சிக்கினர்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 4:52:09 PM (IST)

மிலாடி நபி: மதுபானக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:42:41 PM (IST)

மக்களுக்கான த.வெ.க. ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை : நெல்லையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேச்சு!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 8:51:53 AM (IST)

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
சனி 22, ஆகஸ்ட் 2026 12:33:41 PM (IST)



உண்மAug 27, 2026 - 10:07:14 AM | Posted IP 172.7*****