» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருச்செந்தூர் ஆவணி திருவிழா: அழைப்பிதழ் படி கொடியேற்றம் நடத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!
சனி 29, ஆகஸ்ட் 2026 8:55:55 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாக் கொடியேற்றத்தை, கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட அழைப்பிதழில் உள்ள விவரங்களின்படியே நடத்த வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூர் கோவில் நிர்வாகி முத்துகிருஷ்ணன், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: "திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி மகோற்சவ கொடியேற்றம் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி காலை 9.00 மணி முதல் 9.22 மணி வரை நடத்தப்பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், கோவில் நிர்வாகம் தற்போது கொடியேற்றத்தை அதிகாலை 5.15 மணி முதல் 5.40 மணி வரை நடத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை மாற்றியதற்கு உரிய காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. பாரம்பரியமாகப் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்படும் நேரத்திலேயே கோவில் சடங்குகள் நடத்தப்பட்டு வருவதால், தற்போதைய நேர மாற்றம் மத நம்பிக்கைகளுக்கும், பக்தர்களின் உணர்வுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, ஆகஸ்ட் 31-ஆம் தேதி காலை 9.00 மணி முதல் 9.22 மணி வரை மட்டுமே கொடியேற்றத்தை நடத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், திருவிழாவிற்கான அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களின்படியே கொடியேற்ற நிகழ்வுகளை நடத்த வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இனிவரும் காலங்களில் திருவிழா சார்ந்த விவகாரங்களில் கோவில் வித்யாதாரரின் ஆலோசனைகளைப் பெற வேண்டும் என அறிவுறுத்தி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கல்லிடைக்குறிச்சியில் நபிகள் நாயகம் பிறந்த நாள், மதரஸா ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா!
சனி 29, ஆகஸ்ட் 2026 10:11:24 AM (IST)

சிறுவன் ஓட்டிய பைக் மோதி மூதாட்டி பலி: தந்தை கைது!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 4:16:28 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரே நாளில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்; 7 பேர் கைது!
புதன் 26, ஆகஸ்ட் 2026 3:39:29 PM (IST)

திருநெல்வேலியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு!
புதன் 26, ஆகஸ்ட் 2026 11:57:39 AM (IST)

மதுபோதை தகராறில் வெறிச்செயல்: வாலிபரை வெட்டிக்கொன்ற 3 சிறுவர்கள் சிக்கினர்!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 4:52:09 PM (IST)

மிலாடி நபி: மதுபானக்கடைகள், பார்களை மூட ஆட்சியர் ஆனந்த் மோகன் உத்தரவு!
செவ்வாய் 25, ஆகஸ்ட் 2026 12:42:41 PM (IST)


