» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேர்தல் பணி செய்யாவிட்டால் கட்சியிலிருந்து நீக்கிவிடுவேன்: துரைமுருகன் பேட்டி

திங்கள் 4, மார்ச் 2024 11:43:38 AM (IST)

தேர்தல் பணி செய்யாவிட்டால் கட்சியிலிருந்து நீக்கிவிடுவேன் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவது தொடர்பாக ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சருக்கு, அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று கடிதம் எழுதி உள்ளேன். அதேபோல கோர்ட்டில் வழக்கு இருக்கும்போது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயல் என்றும் சுட்டிக்காட்டி உள்ளேன். 

அண்டை மாநிலம் எங்களோடு பேசி இருக்கலாம். பேசாமல் செய்வது தவறு என்று எழுதியுள்ளேன். சரிவர செயல்படாதவர்களை மக்களவை தேர்தல் முடிந்ததும் கட்சியிலிருந்து நீக்கிவிடுவேன். யார் பணி செய்யவில்லையோ எடுத்து விடுவேன்; யாரையும் நான் கேட்க தேவையில்லை. நான்தான் பொதுச்செயலாளர். 

மறுநாள் முரசொலியில் கட்டம் கட்டிவிடுவேன். ஒன்றிய செயலாளர்கள் நிலைமை என்ன என்பதை நானே பார்ப்பேன். சரியாக இருந்தால் விட்டுவிடுவேன், இல்லை என்றால் தூக்கிவிடுவேன். மாற்றுக் கருத்து கிடையாது. முதலில் கட்சிதான். கொள்கையை பேசாமல் வாரிசு அரசியலை கூறி தேர்தலை பா.ஜ.க. சந்தித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory