» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தேர்தல் பணி செய்யாவிட்டால் கட்சியிலிருந்து நீக்கிவிடுவேன்: துரைமுருகன் பேட்டி
திங்கள் 4, மார்ச் 2024 11:43:38 AM (IST)
தேர்தல் பணி செய்யாவிட்டால் கட்சியிலிருந்து நீக்கிவிடுவேன் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவது தொடர்பாக ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சருக்கு, அப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று கடிதம் எழுதி உள்ளேன். அதேபோல கோர்ட்டில் வழக்கு இருக்கும்போது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயல் என்றும் சுட்டிக்காட்டி உள்ளேன்.
அண்டை மாநிலம் எங்களோடு பேசி இருக்கலாம். பேசாமல் செய்வது தவறு என்று எழுதியுள்ளேன். சரிவர செயல்படாதவர்களை மக்களவை தேர்தல் முடிந்ததும் கட்சியிலிருந்து நீக்கிவிடுவேன். யார் பணி செய்யவில்லையோ எடுத்து விடுவேன்; யாரையும் நான் கேட்க தேவையில்லை. நான்தான் பொதுச்செயலாளர்.
மறுநாள் முரசொலியில் கட்டம் கட்டிவிடுவேன். ஒன்றிய செயலாளர்கள் நிலைமை என்ன என்பதை நானே பார்ப்பேன். சரியாக இருந்தால் விட்டுவிடுவேன், இல்லை என்றால் தூக்கிவிடுவேன். மாற்றுக் கருத்து கிடையாது. முதலில் கட்சிதான். கொள்கையை பேசாமல் வாரிசு அரசியலை கூறி தேர்தலை பா.ஜ.க. சந்தித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சென்னையில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழை: விமானங்கள் தாமதம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:40:09 PM (IST)

தன்மானம்தான் முக்கியம் என்றால் டெல்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:12:21 PM (IST)

ம.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா தலைமையில் புதிய கட்சி உதயம்: கொடி அறிமுகம்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:17:34 AM (IST)

அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் நடு ரோட்டில் நிற்பார்கள்: இபிஎஸ் ஆவேசம்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 11:08:29 AM (IST)

கிராண்ட் சுவிஸ் செஸ் தொடரில் சாம்பியன் : வைஷாலிக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 10:19:45 AM (IST)

கல்லூரிகளில் பி.எட், எம்.எட். படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:31:34 AM (IST)
