» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி
ஞாயிறு 12, மே 2024 8:38:35 PM (IST)
அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடர சேலம் மாவட்ட கலெக்டர் அனுமதி கோரிய நிலையில், தற்போது அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 3 ஆண்டுகளில், திமுக அரசு என் மீதும், எங்கள் பா.ஜ., நிர்வாகிகள் மீதும் உண்மையைப் பேசியதற்காக ஏராளமான வழக்குகளைத் தொடுத்துள்ளது. தற்போது என் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்கியது.
என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது. உண்மையை பேசியதற்காக என் மீது வழக்கு போடுகின்றனர். போதைப்பொருள் வியாபாரிக்கு கட்சியில் பொறுப்பு வழங்கிய திமுகவின் உண்மைநிலை மக்களுக்கு தெரியும். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.