» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கள்ளச்சாராயம் கடத்தலை தடுப்பதில் தமிழக காவல்துறை தோல்வி: ராமதாஸ்
புதன் 10, ஜூலை 2024 5:44:25 PM (IST)
தமிழ்நாட்டிற்கு கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுவதை தடுப்பதில் காவல்துறை தோல்வி அடைந்து விட்டது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

மதுராபூரிகுடிசை கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், பிரபு ஆகிய இரு தொழிலாளர்கள் புதுவை மாநிலம் மதகடிப்பட்டு கிராமத்திற்குச் சென்று கள்ளச்சாராயத்தை வாங்கி வந்து தங்கள் ஊரைச் சேர்ந்த ராஜா, சுரேஷ் பாபு, பிரகாஷ், காளிங்கராஜ் உள்ளிட்டோருடன் சேர்ந்து குடித்துள்ளனர். அடுத்த சில மணி நேரங்களில் 7 பேருக்கும் கடுமையான உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 2 நாள் தீவிர மருத்துவத்திற்குப் பிறகு 5 பேர் வீடு திரும்பிவிட்ட நிலையில், மீதமுள்ள இருவர் கல்லீரல் பாதி்ப்புக்காக தொடர்ந்து மருத்துவம் பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்த நிலையில், தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதையும், கடத்தி வரப்படுவதையும் தடுக்க தமிழக காவல்துறை தவறிவிட்டது என்பதைபே இந்த நிகழ்வு காட்டுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் புதுவையில் இருந்து வாங்கிவரப்பட்ட கள்ளச்சாராயத்தைக் குடித்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், தமிழக காவல்துறை விழித்துக் கொண்டு எல்லைப் பகுதியில் சோதனையை வலுப்படுத்தி இருந்தால், மதுராபூரிகுடிசை கள்ளச்சாராய பாதிப்புகளை தடுத்திருக்க முடியும்.
ஆனால், புதுவையில் இருந்து கொண்டுவரப்படும் கள்ளச்சாராயத்தைத் தடுக்க தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயக் கடத்தலை தடுப்பதில் தமிழக அரசும், காவல்துறையும் முற்றிலுமாக தோல்வியடைந்துவிட்டன. தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு மது மற்றும் கள்ளச்சாராயம் கடத்தி வரப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா ஆய்வு
வெள்ளி 20, ஜூன் 2025 5:37:39 PM (IST)

பாலியல் வழக்குகள்: பெண்கள், குழந்தைகளின் பெயர், அடையாளத்தை வெளியிடக்கூடாது!
வெள்ளி 20, ஜூன் 2025 5:01:49 PM (IST)

தொழில்நுட்பக் கோளாறு: அவசரமாக தரையிறங்கிய விமானம்.. 8 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!
வெள்ளி 20, ஜூன் 2025 4:26:26 PM (IST)

தயாநிதி மாறனின் குற்றச்சாட்டு ஆதாரமற்றவை: சன் டி.வி. நெட்வொர்க் விளக்கம்
வெள்ளி 20, ஜூன் 2025 4:12:32 PM (IST)

கன்னியாகுமரி மாவட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய கோரிக்கை!
வெள்ளி 20, ஜூன் 2025 3:21:15 PM (IST)

ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு வைத்தால் போதும்: தமிழக அரசு
வெள்ளி 20, ஜூன் 2025 11:38:49 AM (IST)
