» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடியில் போக்குவரத்து சிக்னல் கம்பம் சரிந்து விழுந்தது: பெரும் விபத்து தவிர்ப்பு

திங்கள் 15, ஜூலை 2024 5:41:59 PM (IST)



தூத்துக்குடியில் பலத்த காற்றில் குரூஸ் பர்னாந்து பகுதியில் அமைந்துள்ள போக்குவரத்து சிக்னல் கம்பம் சரிந்து விழுந்தது. 

தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள குருஸ் பர்னாந்து சிலை அருகே போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து சிக்னல் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாநகரில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக போக்குவரத்து சிக்னல் கம்பம் திடீரென கீழே சரிந்து விழுந்தது.  

இரும்பால் ஆன  அதிக எடை கொண்ட இந்த போக்குவரத்து சிக்னல் கம்பம் கீழே சாயும் போது வாகன ஓட்டிகள் யாரும் குறுக்கே செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து கீழே விழுந்த போக்குவரத்து சிக்னல் கம்பத்தை சாலையில் இருந்து  அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 


மக்கள் கருத்து

யார் ?மே 16, 1721 - 12:30:00 PM | Posted IP 172.7*****

அரைகுறை மாநகராட்சி காரணமா ??

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory