» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சுடுகாட்டில் வேன் உரிமையாளர் கொடூர கொலை : ‍ போலீசார் விசாரணை!

செவ்வாய் 16, ஜூலை 2024 10:24:52 AM (IST)

கோவில்பட்டி அருகே சுடுகாட்டில் வேன் உரிமையாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மூப்பன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிச்சையா மகன் மாடசாமி (38), சொந்தமாக வேன் வைத்து தனியார் மில்லுக்கு பணியாளர்களை ஒப்பந்தம் அடிப்படையில் அழைத்துச் சென்று வந்தார். மாடசாமிக்கு திருமணமாகி மகாதேவி என்ற மனைவியும், மதிவர்ஷன், மகா ஸ்ரீ என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று வெளியே சென்றவர் இரவு வரை வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் மூப்பன்பட்டி கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் மாடசாமி இருசக்கர வாகனம் கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாடசாமி உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது சுடுகாட்டில் எரியூட்டும் இடத்தில் மாடசாமி முகம், கை பகுதியில் அரிவாள் வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். 

இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதா? அல்லது வேறு எதுவும் காரணமா? என்பது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory