» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோவிலில் பவுர்ணமி வழிபாடு : ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

ஞாயிறு 21, ஜூலை 2024 9:05:45 AM (IST)



திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பவுர்ணமி விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இரவு முழுவதும் விடிய விடிய வழிபாடு நடத்தினர்.

அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயில் உள்ளது. பவுர்ணமி தோறும் கொங்கு மண்டல பகுதியை சேர்ந்த பக்தர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதன்படி நேற்று ஆடி பவுர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு முழுவதும் தங்கியிருந்து சமுத்திரத்துக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்து வழிபட்டனர்.

மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூர் கடற்கரையில் இரவு முழுவதும் தங்கியிருந்து பவுர்ணமியை முன்னிட்டு வழிபாடு நடத்தினர். இதனால் திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கடற்கரை, கோயில் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் மிகுதியாக காணப்பட்டது. பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்திருந்ததால் ஏராளமான வாகனங்கள் திருச்செந்தூரில் குவிந்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory