» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போலீஸ்காரர் தூக்குபோட்டு தற்கொலை : தூத்துக்குடி அருகே சோகம்!

செவ்வாய் 23, ஜூலை 2024 5:59:31 PM (IST)

தூத்துக்குடி அருகே போலீஸ்காரர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள குளத்தூரைச் சேர்ந்தவர் காசி பாண்டியன் (32). இவர் திருச்செந்தூர் கோயில் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்ததுள்ளார். இந்நிலையில் இவர் இன்று மதியம் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

இதுகுறித்த தகவல் அறிந்த குளத்தூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி மற்றும்போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட போலீஸ்காரர் காசி பாண்டியன் கடந்த 17ஆம் தேதி ஏர்வாடிக்கு பணிக்கு செல்வதாக கூறி சென்று பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் இன்று மதியம் வீட்டில் தூக்கு போட்டு  தற்கொலை செய்துள்ளார். இவர் தற்கொலைக்கு காரணம் என்ன குடும்ப பிரச்சனையா அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து

Ip addressJul 24, 2024 - 07:52:47 AM | Posted IP 172.7*****

Ada paavame

LaksmananJul 23, 2024 - 09:43:53 PM | Posted IP 172.7*****

I need jop

LAKSHMANAN LakshmananJul 23, 2024 - 09:43:24 PM | Posted IP 172.7*****

I need you jop

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory