» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

குமரியில் விமான நிலையம்: மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் கோரிக்கை!

சனி 27, ஜூலை 2024 9:58:31 AM (IST)



கன்னியாகுமரியில் விமான நிலையம் மற்றும் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்பி கோரிக்கை விடுத்தார். 

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு அவர்களை சந்தித்து கன்னியாகுமரியில் விமான நிலையம் மற்றும் ஹெலிகாப்டர் தளம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டேன்.

வெளிநாட்டு வாழ் குமரி மாவட்டத்தின் மக்கள், சுற்றுலா பயணிகள், கடலில் காணாமல் போகும் மீனவர்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இவை தேவை என்பதை எடுத்து கூறினேன்.

அதே போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் உள்ளன ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லா நோய்களுக்கும் சிகிச்சை அளிக்க கூடிய ஒரு இஎஸ்ஐ மருத்துவ மனை இல்லாதது பெரும் குறையாக உள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது கன்னியாகுமரி மாவட்டத்திற்கு அனுமதிக்கப்பட்ட பல்நோக்கு இஎஸ்ஐ மருத்துவமனையின் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டுமென மத்திய தொழிலாளர் நல துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்களை சந்தித்து கோரிக்கை வைத்தேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து

GaneshJul 27, 2024 - 06:01:58 PM | Posted IP 172.7*****

ha ha ha...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads



Tirunelveli Business Directory