» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
இசைவாணி மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு
செவ்வாய் 26, நவம்பர் 2024 4:18:52 PM (IST)
சபரிமலை அய்ப்பனை இழிவுபடுத்தும் வகையில் கானா பாடல் பாடிய இசைவாணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சபரிமலை அய்ப்பனை இழிவுபடுத்தும் வகையில் கானா பாடல் பாடிய பாடகி இசைவாணி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா..? என்று அமைச்சர் சேகர்பாபுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த அவர், "எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கிறார். எந்த மதத்தினரும் பிற மதத்தினரை இழிவுப்படுத்துவதை முதல்-அமைச்சர் அனுமதிக்க மாட்டார். இசைவாணி மீது புகார் கொடுக்கப்பட்டு உள்ளது என்பதை பத்திரிகை வாயிலாக அறிந்தேன்.
இது குறித்து நிச்சயம் சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து தவறு இருப்பின், உறுதியாக இந்த ஆட்சி நடவடிக்கை எடுக்கும். மதத்தால், இனத்தால், மக்களை பிளவுபடுத்துகின்ற சக்திகள் இந்த ஆட்சியில் தலைதூக்க கூடாது என்பதில் முதல்-அமைச்சர் உறுதியாக இருக்கிறார்" என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

த.வெ.க., ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு: 15 ஆண்டு கால திமுக கூட்டணி முறிவு!
புதன் 6, மே 2026 12:43:52 PM (IST)

த.வெ.க-வுக்கு காங்கிரஸ் ஆதரவளிப்பது முதுகில் குத்தும் செயல் - தி.மு.க. கடும் கண்டனம்!
புதன் 6, மே 2026 11:50:29 AM (IST)

ஆட்சி அமைக்க ஆதரவு தாருங்கள்! - காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் தலைவர்களுக்கு விஜய் கடிதம்!
புதன் 6, மே 2026 11:10:32 AM (IST)

தமிழகத்தில் புதிய அரசு அமைவதில் தாமதம் மே 8-ல் பிளஸ் 2 முடிவுகள் வெளியாகுமா?
புதன் 6, மே 2026 10:38:37 AM (IST)

முதல்வர் விஜய்யின் முதல் கையெழுத்து எது? - த.வெ.க. தேர்தல் அறிக்கையை எதிர்நோக்கும் தமிழகம்!
புதன் 6, மே 2026 10:17:45 AM (IST)

கார் விபத்தில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி காலமானார்: திரையுலகில் பெருஞ்சோகம்!
புதன் 6, மே 2026 8:33:33 AM (IST)


