» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
புயல் உருவாக மேலும் தாமதம்: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
வியாழன் 28, நவம்பர் 2024 12:24:40 PM (IST)
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதால் புயல் உருவாவதில் மேலும் தாமதமாகியுள்ளது.
வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி நவம்பர் 30ம் தேதி கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. காரைக்கால் மாமல்லபுரம் இடையே இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புயல் உருவாக மேலும் தாமதமாகியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 480 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
கடந்த நில மணி நேரங்களாக நகராமல் இருந்த நிலையில், தற்போது மணிக்கு 2 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பேரிடர் மீட்பு படையினர் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளிலும் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாம்பழம் சின்னத்தை முடக்க முடியாது: ராமதாஸ் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!
வியாழன் 26, மார்ச் 2026 8:21:33 PM (IST)

தமிழகத்தில் இதுவரை ரூ.189 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்: அர்ச்சனா பட்நாயக் தகவல்!
வியாழன் 26, மார்ச் 2026 8:17:01 PM (IST)

தீய சக்தி தி.மு.க. மண்ணைக் கவ்வப் போவது உறுதி : விஜய் அறிக்கை
வியாழன் 26, மார்ச் 2026 5:46:08 PM (IST)

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிரடி: இதுவரை ரூ.28.58 லட்சம் பறிமுதல்!
வியாழன் 26, மார்ச் 2026 5:10:34 PM (IST)

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசங்கள் தர மாட்டோம் : சீமான் பிரச்சாரம்!
வியாழன் 26, மார்ச் 2026 4:39:58 PM (IST)

சமூக ஊடகங்களில் கண்ணியம் காக்க வேண்டும்: ஆட்சியர் க.இளம்பகவத் அறிவுறுத்தல்!
வியாழன் 26, மார்ச் 2026 4:14:26 PM (IST)

