» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் பெண் மருத்துவர் மீது தாக்குதல் : கணவர் கைது
வெள்ளி 29, நவம்பர் 2024 4:43:55 PM (IST)
தூத்துக்குடியில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து பெண் மருத்துவரை தாக்கிய அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி பக்கிள்புரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன் மகன் டேனியல்ராஜ் (36). இவர் பாத்திமா நகரைச் சேர்ந்த ரேவதி (35) என்ற பெண்ணை கடந்த 2022ல் காதல் திருமணம் செய்து கொண்டார். ரேவதி, பிரையன்ட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.
குடும்ப பிரச்சனை காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் நேற்று ரேவதி மருத்துவமனையில் பணி செய்து கொண்டிருந்த போது மதுபோதையில் டேனியல்ராஜ், அங்கு சென்று தகராறு செய்து அவரை கையால் தாக்கினாராம். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் ரேவதி அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்தமழரசன் வழக்குப் பதிந்து டேனியல் ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஏஐ தொழில்நுட்பம் இல்லாத துறையே இல்லை : கனிமொழி எம்பி பேச்சு
திங்கள் 14, ஜூலை 2025 8:45:26 PM (IST)

தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
திங்கள் 14, ஜூலை 2025 5:49:00 PM (IST)

காப்புரிமை விவகாரம்: நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 14, ஜூலை 2025 4:38:44 PM (IST)

இபிஎஸ் ஒப்புக் கொண்டால் நிபந்தனையின்றி அதிமுகவில் இணைவேன் : ஓபிஎஸ் அறிவிப்பு!
திங்கள் 14, ஜூலை 2025 4:24:50 PM (IST)

பள்ளிகளில் ப வடிவ இருக்கையால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்: பாஜக குற்றச்சாட்டு!
திங்கள் 14, ஜூலை 2025 12:57:07 PM (IST)

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவு : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!
திங்கள் 14, ஜூலை 2025 12:17:46 PM (IST)
