» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் பெண் மருத்துவர் மீது தாக்குதல் : கணவர் கைது
வெள்ளி 29, நவம்பர் 2024 4:43:55 PM (IST)
தூத்துக்குடியில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து பெண் மருத்துவரை தாக்கிய அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி பக்கிள்புரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயசீலன் மகன் டேனியல்ராஜ் (36). இவர் பாத்திமா நகரைச் சேர்ந்த ரேவதி (35) என்ற பெண்ணை கடந்த 2022ல் காதல் திருமணம் செய்து கொண்டார். ரேவதி, பிரையன்ட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிந்து வருகிறார்.
குடும்ப பிரச்சனை காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் நேற்று ரேவதி மருத்துவமனையில் பணி செய்து கொண்டிருந்த போது மதுபோதையில் டேனியல்ராஜ், அங்கு சென்று தகராறு செய்து அவரை கையால் தாக்கினாராம். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் ரேவதி அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முத்தமழரசன் வழக்குப் பதிந்து டேனியல் ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி : நெல்லை சரக டிஐஜி முதலிடம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:10:00 PM (IST)

குமரி மாவட்டத்தில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.77.27 கோடி கடனுதவி: ஆட்சியர் வழங்கினார்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 5:17:29 PM (IST)

ஆயுத பூஜை, தீபாவளி: சென்னை - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:56:34 PM (IST)

கன்னியாகுமரியில் 18ஆம் தேதி கல்விக் கடன் மேளா: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 3:48:43 PM (IST)

சென்னையில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கனமழை: விமானங்கள் தாமதம்!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:40:09 PM (IST)

தன்மானம்தான் முக்கியம் என்றால் டெல்லி சென்றது ஏன்? இபிஎஸ்-க்கு டிடிவி தினகரன் கேள்வி!
செவ்வாய் 16, செப்டம்பர் 2025 12:12:21 PM (IST)
