» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பள்ளியில் சிறுமி உயிரிழந்த விவகாரம் : தாளாளர் உள்ளிட்ட 3 பேருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்!!
வெள்ளி 10, ஜனவரி 2025 5:35:16 PM (IST)
விக்கிரவாண்டி பள்ளிச்சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 3 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் கழிவறைக்குச் சென்ற 3ம் வகுப்பு சிறுமி கழிவறை தொட்டியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் தனியார் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோம்னிக் மேரி, வகுப்பாசிரியர் ஏஞ்சல் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமீன் தர காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர் 3 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 3 பேரும் சென்னையில் ஒரு வாரம் தங்கியிருந்து, மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று கூறினார்.
பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கருத்து வேறுபாடு என்பது ஜனநாயக உரிமை: சவுக்கு சங்கர் ஜாமின் வழக்கில் நீதிபதிகள் கருத்து
வெள்ளி 26, டிசம்பர் 2025 8:56:12 PM (IST)

பராசக்தி திரைப்படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்!!
வெள்ளி 26, டிசம்பர் 2025 4:55:03 PM (IST)

மத்திய அரசின் தரவரிசைகளில் தமிழ்நாடு நம்பர் 1: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 4:48:40 PM (IST)

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்: 156 வாகனங்கள் பறிமுதல்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 4:28:21 PM (IST)

மணக்குடி கிராமத்தில் சுனாமி நினைவு தினம்: கல்லறை தோட்டத்தில் மீனவர்கள் அஞ்சலி!
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:14:46 PM (IST)

இடியாப்பம் விற்க உரிமம் அவசியம் : தமிழக உணவு பாதுகாப்புத் துறை உத்தரவு
வெள்ளி 26, டிசம்பர் 2025 12:03:09 PM (IST)

