» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பள்ளியில் சிறுமி உயிரிழந்த விவகாரம் : தாளாளர் உள்ளிட்ட 3 பேருக்கு உயர்நீதிமன்றம் ஜாமீன்!!
வெள்ளி 10, ஜனவரி 2025 5:35:16 PM (IST)
விக்கிரவாண்டி பள்ளிச்சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 3 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரும் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள், சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமீன் தர காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கில் பள்ளி தாளாளர், முதல்வர் மற்றும் ஆசிரியர் 3 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 3 பேரும் சென்னையில் ஒரு வாரம் தங்கியிருந்து, மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று கூறினார்.
பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அக்மார்க் தரச்சான்று பெறுவதற்காக பதிவு கட்டணம் ரூ.5000லிருந்து ரூ.500-ஆக குறைப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 4:55:58 PM (IST)

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி : 21 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு!
புதன் 17, செப்டம்பர் 2025 4:51:32 PM (IST)

கள்ளச்சாராயம் விற்பது தான் திமுக-வின் இளைஞர் அணி கோட்பாடா? நயினார் நாகேந்திரன் கேள்வி
புதன் 17, செப்டம்பர் 2025 4:25:18 PM (IST)

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!
புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை மணிமண்டப கட்டுமான பணிகள் : ஆட்சியர் ஆய்வு
புதன் 17, செப்டம்பர் 2025 3:30:36 PM (IST)

குமரியிலிருந்து சென்னைக்கு இரண்டாவது தினசரி இரவு நேர ரயில் இயக்கப்படுமா? குமரி மக்கள் எதிர்பார்ப்பு
புதன் 17, செப்டம்பர் 2025 3:25:32 PM (IST)
