» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சென்னையில் தொடர் நகைப் பறிப்பில் ஈடுபட்டவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!
புதன் 26, மார்ச் 2025 10:43:33 AM (IST)
சென்னையில் ஒரே நேரத்தில் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் நகைப் பறிப்பில் ஈடுபட்டவரை போலீசார் என்வுகன்டரில் சுட்டுக் கொன்றனர்.
சென்னை திருவான்மியூர், பெசண்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் காலை 6 மணி முதல் 7 மணி வரை நகைப் பறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது. இதையடுத்து நகைப் பறிப்பு சம்பவம் தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும், இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் விமானத்தில் செல்வதற்கு தயாரான 2 பேரை செவ்வாய்க்கிழமை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர்கள் ஹைதராபாத்திற்கு தப்பிச் செல்ல முயன்றதும், அவர்கள் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட ஜாஃபர் குலாம் ஹுசைன் மீது பல்வேறு மாநிலங்களில் நகைப் பறிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், சென்னையில் திருடப்பட்ட நகைகளை தரமணி பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக கூறியதை அடுத்து காவல் ஆய்வாளர் புகாரி தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த நகைகளை பறிமுதல் செய்வதற்காக ஜாஃபர் குலாம் ஹுசைனை போலீசார் தரமணி ரயில் நிலையம் அருகே அழைத்துச் சென்றனர்.
அப்போது, தரமணி ரயில் நிலையம் அருகே திடீரென தான் பதுக்கி வைத்திருந்த கை துப்பாக்கியை எடுத்து போலீசாரை சுட்டுவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது.இதையடுத்து தற்காப்புக்காக ஜாஃபர் குலாம் ஹுசைனை போலீசார் துப்பாக்கியால் சுட்டத்தில் ஜாஃபரின் மார்பில் குண்டு பயந்து சுருண்டு விழுந்துள்ளார்.
பின்னர் உயிருக்கு போராடிய ஜாஃபரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான ஜாஃபர் குலாம் ஹுசைன் உடலை உடல்கூறாய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், ஜாஃபர் குலாம் பயன்படுத்திய இருசக்கர வாகனம், கைத்துப்பாக்கி உள்ளிட்ட பொருள்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜாஃபர் மீது பல்வேறு மாநிலங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இவர்கள் ரானிய கொள்ளையர்கள் எனவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு
ஞாயிறு 19, அக்டோபர் 2025 1:14:38 PM (IST)

தூத்துக்குடியில் தீபாவளி பாதுகாப்பு தீவிரம்: ட்ரோன் கேமரா மூலம் நகர் பகுதிகள் கண்காணிப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 11:00:17 AM (IST)

தீபாவளி விற்பனை களை கட்டியது: ரயில், பஸ் நிலையங்களில் கூட்டம் அலைமோதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:41:28 AM (IST)

கொட்டாவி விட்டதால் திறந்த வாயை மூட முடியாமல் தவித்த வாலிபர்: ஓடும் ரயிலில் பரபரப்பு!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 10:29:36 AM (IST)

தூத்துக்குடியில் சீனாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்!
ஞாயிறு 19, அக்டோபர் 2025 9:04:24 AM (IST)

கரூர் சம்பவத்தில் உயிரிழந்த 41பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் வழங்கிய விஜய்!
சனி 18, அக்டோபர் 2025 5:29:00 PM (IST)

KANNANMar 26, 2025 - 11:41:01 AM | Posted IP 162.1*****