» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசு ஊழியர்களுக்கு ஏப்.2ம் தேதி சம்பளம் வரவு வைக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
புதன் 26, மார்ச் 2025 5:16:05 PM (IST)
அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு மார்ச் மாதம் சம்பளம் ஏப்.2ம் தேதி வரவு வைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியம் தள்ளிப்போகிறது. 2024-2025ம் நிதியாண்டின் கடைசி நாள் மார்ச் 31ம் தேதி நிறைவு பெறுகிறது. ஆனால் அன்று ரம்ஜான் பண்டிகை வருவதால் விடுமுறையாகும். அதேபோல் மார்ச் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதுடன் தெலுங்கு வருடப்பிறப்பு ஆகும்.
அதேபோல் மார்ச் 29ம் தேதி சனிக்கிழமை வருகிறது. ஏப்ரல் 1ம் தேதியை பொறுத்தவரை வங்கி கணக்கு தொடக்கம் என்பதால் அன்று எந்த பணிகளும் வங்கிகளில் நடைபெறாது. எனவே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் இந்த முறை ஏப்ரல் 2ம் தேதி தான் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிக்க குறிப்பில் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 9.30 இலட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், 7.05 இலட்சம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது மார்ச் மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் /குடும்ப ஓய்வூதியம் ஆகியவை இவ்வாண்டு ஏப்ரல் 1 அன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் 02.04.2025 வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் குமரி மாவட்டம் 5 வது இடம்பெற்று சாதனை : ஆட்சியர் வாழ்த்து
வெள்ளி 9, மே 2025 10:12:02 AM (IST)

கண்ணீர் வேண்டாம் தம்பி!.. இரு கைகளை இழந்த மாணவனின் கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
வியாழன் 8, மே 2025 5:31:15 PM (IST)

குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
வியாழன் 8, மே 2025 5:15:12 PM (IST)

அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து கனிமவளத் துறை பறிப்பு ஏன்? - பரபரப்பு தகவல்கள்
வியாழன் 8, மே 2025 12:47:45 PM (IST)

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்
வியாழன் 8, மே 2025 12:03:27 PM (IST)

ரெட்ரோ படத்தின் வெற்றிவிழா : அகரம் அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடி வழங்கிய சூர்யா!
வியாழன் 8, மே 2025 11:54:49 AM (IST)
