» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காவல்துறைக்கு துப்பாக்கி கொடுப்பது என்கவுன்ட்டர் செய்வதற்கு அல்ல: உயர்நீதிமன்றம் கண்டனம்
வியாழன் 17, ஏப்ரல் 2025 5:41:53 PM (IST)
"தமிழ்நாட்டில் சமீபத்தில் என்கவுன்ட்டர்கள் அதிகரித்து உள்ளன. போலீஸ் அதிகாரிக்கு துப்பாக்கி கொடுத்திருப்பது என்கவுன்ட்டர் செய்வதற்கு அல்ல.. தற்காப்புக்கு தான்" என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் மதுரையில் கிளாமர் காளி என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கும் வெள்ளைக் காளிக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால், போலீசார் உள்நோக்கத்துடன் வெள்ளைக்காளியை இந்த வழக்கில் தொடர்புபடுத்தி உள்ளனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுபாஷ் சந்திர போஸ் என்பவர் சமீபத்தில் என்கவுன்ட்டரில் இறந்துவிட்டார். எனவே, வெள்ளைக்காளியையும் போலீசார் என்கவுன்ட்டர் செய்ய வாய்ப்புள்ளது. ஆகவே, அவரது விசாரணையை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்த உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த மனு நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், விசாரணையின் பெயரில் வெள்ளைக்காளியை அழைத்துச் சென்று என்கவுன்ட்டர் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்தார்.
அதற்கு நீதிபதி கூறுகையில், "தமிழ்நாட்டில் சமீபத்தில் என்கவுன்ட்டர்கள் அதிகரித்து உள்ளன. போலீஸ் அதிகாரிக்கு துப்பாக்கி கொடுத்திருப்பது என்கவுன்ட்டர் செய்வதற்கு அல்ல.. தற்காப்புக்கு தான். குற்றவாளிகளை காலுக்குக் கீழ் சுட்டுப்பிடியுங்கள்.. புழல் சிறையில் உள்ள வெள்ளை காளியை மதுரை திருமங்கலம் கோர்ட்டுக்கு அழைத்து வரும்போது அவருக்கு ஆபத்து ஏற்பட்டால், அந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தார். .
இதனிடையே அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இரண்டு போலீசாரை ரவுடிகள் கொலை செய்துவிட்டதாக தெரிவித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மக்கள் கருத்து
இந்தியன்Apr 17, 2025 - 08:04:51 PM | Posted IP 162.1*****
நாளுக்குநாள் ரௌடிகள் தமிழ்நாட்டில் பெருகிக்கொண்டு வருகிறார்கள்.அவர்களை கட்டுப்படுத்துவதற்கு என்கவுண்டர் தவிர வேறு வழி இல்லை.நாடு மோசமான நிலையில் போய்க்கொண்டு இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
மேலும் தொடரும் செய்திகள்

தொப்புள்கொடி உறவுகளுக்கு நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக இருப்போம்: விஜய்
ஞாயிறு 18, மே 2025 8:55:51 PM (IST)

சுற்றுலா வேன் மீது ஆம்னி பஸ் மோதல்: தந்தை-மகன் உள்பட 5 பேர் பலி; 27 பேர் படுகாயம்
ஞாயிறு 18, மே 2025 9:36:09 AM (IST)

கிணற்றுக்குள் கார் பாய்ந்து விபத்து: 2 பெண்கள், குழந்தை உட்பட 5பேர் பரிதாப சாவு!
சனி 17, மே 2025 9:13:18 PM (IST)

டாஸ்மாக் ஊழல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் : அன்புமணி வலியுறுத்தல்
சனி 17, மே 2025 5:12:23 PM (IST)

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சனி 17, மே 2025 4:20:36 PM (IST)

குமரி மாவட்டத்தில் மே 24ல் மெகா வேலைவாய்ப்பு முகாம் : இளைஞர்கள் பங்கேற்க அழைப்பு!
சனி 17, மே 2025 4:06:54 PM (IST)

ஆமாம்Apr 18, 2025 - 08:25:05 AM | Posted IP 162.1*****