» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பனை மரத் தொழிலாளர்கள் மீது காவல் துறையினர் கடும் நெருக்கடி: எர்ணாவூர் நாராயணன்
செவ்வாய் 27, மே 2025 8:08:11 AM (IST)

தமிழகத்தில் பனைத் தொழிலாளர்களிடம் காவல் துறை நெருக்கடி இல்லாமல் இருந்தால் பனைத் தொழில் சிறந்து விளங்கும் என தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்தார்.
பனைத் தொழிலாளர்கள் பாதுகாப்பு மாநாடு குறித்து தென் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தூத்துக்குடியில் உள்ள தனியார் கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு பனை மரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் தலைவரும் சமத்துவ மக்கள் கழக நிறுவன தலைவருமான எர்ணாவூர் நாராயணன் தலைமை வகித்தார்.
ஆலோசனைக் கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பனை மரத் தொழிலாளர் நலவாரியத் தலைவராக பதவியேற்று, நான்கு ஆண்டுகள் ஆகின்றன. முதல் ஆண்டில் நல வாரியத்தில் 15 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். 2 ஆம் ஆண்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 3 ஆம் ஆண்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஒரு கோடி பனை விதைகள் நடவு செய்து சாதனை படைக்கப்பட்டது.
தற்போது 4ஆம் ஆண்டில் பனை மரத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், ராமநாதபுரத்தில் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் மாநாடு நடத்தப்படவுள்ளது. இதில், பனைத் தொழிலாளர்கள் பிரச்னைகள் அனைத்தும் விவாதிக்கப்படும். கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணத்திற்கு பின்னர், பனை மரத் தொழிலாளர்கள் மீது காவல் துறையினர் கடும் நெருக்கடி கொடுக்கின்றனர்.
ஏற்கெனவே பனைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், காவல் துறையினரின் நெருக்கடியால் தொழிலாளர்கள் பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இது குறித்து அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்கவுள்ளார். மாநாட்டில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை மரத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள உள்ளனர். 2026 பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொடருவோம். தேர்தல் நேரத்தில் எத்தனை இடங்கள் என்பது குறித்து பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.
இக்கூட்டத்தில், சமத்துவ மக்கள் கழக தூத்துக்குடி மாவட்டச் செயலர் மாலைசூடி அற்புதராஜ், மாநில துணைச் செயலர் காமராசர், தொழிற்சங்க செயலர் ஜெபராஜ் டேவிட், கலை இலக்கிய அணிச் செயலர் அந்தோணி பிச்சை, மாநில பொதுச் செயலர் சூலூர் சந்திரசேகரன், பொருளாளர் கண்ணன், நாடார் பேரவை மாவட்ட தலைவர்கள் அருண் சுரேஷ்குமார், பரமசிவன், மாவட்ட செயலர் டேனியல்ராஜ், மாவட்டப் பொருளாளர் சுப்பையா உள்பட பலர் பங்கேற்றனர்.
மக்கள் கருத்து
தமிழ்ச்செல்வன்மே 27, 2025 - 11:21:12 AM | Posted IP 162.1*****
தீமூக்கா 2026ல் தோல்வி அடையும் என அனுமானித்த அண்ணாச்சி மெல்ல அணி மாறுகிறார்.
அதன் வெளிப்பாடுதான் இது....
மேலும் தொடரும் செய்திகள்

அங்கன்வாடி குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கும் பணி: அமைச்சர் மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்
வெள்ளி 13, ஜூன் 2025 5:20:07 PM (IST)

பொது வெளியில் உயிரி மருத்துவக் கழிவுகளை கொட்டுவோர் மீது குண்டாஸ்: ஆளுநர் ஒப்புதல்!
வெள்ளி 13, ஜூன் 2025 4:48:02 PM (IST)

கீழடி காட்டும் உண்மை ஆர்.எஸ்.எஸ் ஸ்க்ரிப்ட்டுக்கு எதிரானதாக இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
வெள்ளி 13, ஜூன் 2025 4:28:10 PM (IST)

இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம்: த.வெ.க. தலைவர் விஜய் வேண்டுகோள்
வெள்ளி 13, ஜூன் 2025 11:56:58 AM (IST)

தி.மு.க அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் : கனிமொழி எம்.பி. பேச்சு!
வெள்ளி 13, ஜூன் 2025 8:39:54 AM (IST)

தோவாளை கால்வாய் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு
வியாழன் 12, ஜூன் 2025 5:46:04 PM (IST)

ஆம்மே 28, 2025 - 06:24:34 PM | Posted IP 172.7*****