» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.82.84 கோடி கடன் உதவி : அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்
புதன் 11, ஜூன் 2025 3:23:30 PM (IST)

தூத்துக்குடியில் 945 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.82.84 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் வழங்கினார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (11.06.2025) சென்னை கலைவாணர் அரங்கிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழு தினத்தை முன்னிட்டு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவிகளை வழங்கி தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம், மாநகராட்சி மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் , மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் 945 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.82.84 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சிறப்புரையாற்றியதாவது : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்துள்ளார்கள். அதன் ஒருப்பகுதியாக இன்றையதினம் நமது மாவட்டத்தில் மகளிர்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகள் வழங்குகின்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக ஊரகப் பகுதிகளில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், நகர்புற பகுதிகளில் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக கிராமப்புறங்களில் உள்ள ஏழை மகளிரை ஒருங்கிணைத்து சுய உதவிக்குழு அமைத்தல், பயிற்சிகள் வழங்குதல், மக்கள் அமைப்புகளை உருவாக்குதல், மகளிர் உதவிக்குழுக்கள் சுய உதவிக் குழுக்களுக்கு தேவையான கடன் பெற்று தருதல், வாழ்வாதார தொழில்களில் ஈடுபட வைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், தகுதியான இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சிகள் வழங்குதல் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சர் அவர்களின் காலை உணவு திட்டத்தினை செயல்படுத்துதல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக நகர்புற பகுதிகளில் சுய உதவிக்குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகள் அமைத்தல் பயிற்சி வழங்குதல், நகர்புற வாழ்வாதார மையம் மூலமாக சேவைகள் வழங்குதல் தொழில்முனைவோர்களை உருவாக்குதல் மற்றும் தொழில்திறன் பயிற்சிகள் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் பெறுதல் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் அரசின் மூலமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதனை தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் மூலமாக எய்தப்பட்டு வருகிறது.
அதன்படி 2025-2026 ஆம் ஆண்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக் கடன் இலக்கு ரூ.1009 கோடி என நிர்ணயிக்கப்பட்டு, நாளது தேதி வரை ரூ.121 கோடி எய்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் தகுதியான குழுக்களை தரமதிப்பீடு செய்து வங்கிகள் மூலமாக கடன் பெற்று கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்றையதினம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடன் வழங்கும் விழாவிற்கு 1406 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.80 கோடி இலக்கீடாக நிர்ணயிக்ககப்பட்டதில் 729 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.80.47 கோடி இலக்கீடு எய்தப்பட்டு கடனுதவி வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மகளிர் உயர்வே! மாநிலத்தின் உயர்வு! என்ற அடிப்படையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். பெண்கள் சமுதாயம் முன்னேறும் பொழுது தமிழ்சமுதாயம் முன்னேறும். பெண்களும் தொழில் முனைவோர்களாக மாறும்பொழுது நமது பொருளாதார நிலை உயரும் என்ற அடிப்படையில் மகளிர்களை மையமாகக் கொண்டு விடியல் பயணம், புதுமைப்பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் வழங்கப்படுகின்ற கடனுதவிகளை மகளிர்கள் பெற்று நன்றான முறையில் பயன்படுத்த வேண்டும். மேலும், பெண்களும் பொருட்களை உற்பத்தி செய்து வர்த்தகம் செய்வதன் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். அனைவரையும் தொழில் முனைவோர்களாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், புதியதாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்குவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனவே, புதியதாக மகளிர்கள் அக்குழுக்களில் இணையவும், ஊரக வாழ்வாதார இயக்கத்தில் தனி நபர் கடனுதவிகளும், குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மகளிர்கள் பெற்றக்கடனை திருப்பி செலுத்தவேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களும் வழங்குகின்ற கடனுதவிகளை பெற்று தொழில் செய்து உற்பத்தியை பெருக்கி மகளிர்களாகிய உங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ளுங்கள் என சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்தார்.
மேலும், இன்றையதினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரக பகுதிகளை சார்ந்த 439 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.48.21 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளும், நகர்புற பகுதிகளை சார்ந்த 290 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.32.27 கோடி மதிப்பிலான வங்கி கடனுதவிகளும், 85 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.18 கோடி மதிப்பிலான சமுதாய முதலீட்டு நிதி கடனுதவிகளும், 12 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 2 இலட்சம் மதிப்பிலான சுழல் நிதி கடனுதவிகளும், 32 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.34 இலட்சம் மதிப்பிலான தொழில் கடனுதவிகளும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 07 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.28 இலட்சம் மதிப்பிலான இணை மானிய திட்ட கடனுதவிகளும், 80 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.44 இலட்சம் மதிப்பிலான நுண்நிதி தொழில் கடனுதவிகளும் என மொத்தம் 945 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.82.84 கோடி மதிப்பிலான கடனுதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மேயர் பெ.ஜெகன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், துணை மேயர் செ.ஜெனிட்டா,இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தூத்துக்குடி பெ.மல்லிகா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் த.துரைராஜ், உதவி திட்ட அலுவலர்கள் முருகன், கனகராஜ், வெள்ளப்பாண்டியன், வினோதா, சுந்தரமூர்த்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தி.மு.க அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் : கனிமொழி எம்.பி. பேச்சு!
வெள்ளி 13, ஜூன் 2025 8:39:54 AM (IST)

தோவாளை கால்வாய் பகுதியில் அதிகாரிகள் ஆய்வு
வியாழன் 12, ஜூன் 2025 5:46:04 PM (IST)

புதிய ரயில்கள் இயக்கினால் மட்டுமே பயணிகள் நெருக்கடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு!
வியாழன் 12, ஜூன் 2025 5:41:27 PM (IST)

அகமதாபாத் விமான விபத்து மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது : மு.க.ஸ்டாலின் வேதனை!
வியாழன் 12, ஜூன் 2025 4:54:24 PM (IST)

குமரி தந்தை மார்ஷல் நேசமணி பிறந்த நாள் விழா: சிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியர் மரியாதை!
வியாழன் 12, ஜூன் 2025 3:27:30 PM (IST)

நான்தான் பா.ம.க. தலைவர், கூட்டணியை நான்தான் முடிவு செய்வேன் : ராமதாஸ் திட்டவட்டம்
வியாழன் 12, ஜூன் 2025 12:52:12 PM (IST)
