» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.120.53 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் தொடக்கம்

வியாழன் 12, ஜூன் 2025 8:12:36 AM (IST)



தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.120.53 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்துள்ள பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.120.53 கோடி மதிப்பீட்டில் முடிவடைந்துள்ள பாதாள சாக்கடை திட்டப் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, மாநகராட்சி 3ஆவது வார்டு கேடிசி நகர் கழிவு நீர் உந்தும நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கோட்டாட்சியர் பிரபு தலைமை வகித்தார். மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.சி.சண்முகையா எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆணையர் மதுபாலன் வரவேற்றார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் வெங்கடேஷ் திட்ட விளக்கவுரையாற்றினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதாஜீவன், பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையர் சுரேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, சுப்புலட்சுமி, வைதேகி, நாகேஸ்வரி, ஜெயசீலி, தெய்வேந்திரன், அந்தோணி பிரகாஷ் மார்ஷலி உள்பட பலர் பங்கேற்றனர்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory