» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு மருத்துவமனையில் கூடுதலாக 6 டயாலிசிஸ் எந்திரங்கள் : ஆட்சியர் துவக்கி வைத்தார்

வியாழன் 12, ஜூன் 2025 11:20:05 AM (IST)



ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதலாக ஆறு புதிய சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட மருத்துவ துறையின் சார்பில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தனியார் பங்களிப்புடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரத்தினை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, துவக்கி வைத்து தெரிவிக்கையில் "ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறுநீரகப் பிரிவில் சுமார் பதினெட்டு சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் (Dialysis Machine) செயல்பாட்டில் உள்ளது. 

இந்த இயந்திரங்களின் வாயிலாக ஒரு மாதத்திற்கு சுமார் ஆயிரத்து அறுநூறு சிறுநீரக சுத்திகரிப்புகள் தினமும் சுமார் அறுபது சிறுநீரக சுத்திகரிப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சிறுநீரக சுத்திகரிப்பு தற்காலிக சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கும், நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கும் அதாவது Acute Renal Failure, Chronic Renal Failure உள்ள Patients க்கும் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தற்காலிக சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு சில Dialysis Sessions மட்டுமே தேவைப்படும். ஒரு வாரம் அல்லது இரு வாரம் Dialysis செய்த பிறகு அவர்களது சிறுநீரகம் மீண்டும் வேலை செய்ய ஆரம்பிக்கும் பொழுது தொடர்ந்து Dialysis தேவைப்படுவதில்லை. ஆனால் நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு வாரம் இருமுறை தொடர்ந்து Dialysis செய்ய தேவைப்படுகிறது. 

தற்பொழுது பதினெட்டு சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் கள் மூலம் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகமான நோயாளிகள் இருப்பதால் இன்னும் அதிகமாக சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் தேவை இருக்கிறது. இன்று நாகர்கோவில், Rotary Club மூலமாக ஆறு புதிய சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை Dialysis பிரிவில் புதியதாக நன்கொடை கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம், இன்னும் பல புதிய நோயாளிகளுக்கு Dialysis கொடுக்க இந்த சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் இராமலட்சுமி, மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளர் கிங்ஸ்லி, உறைவிட மருத்துவர் விஜயலக்ஷ்மி, உதவி உறைவிட மருத்துவர் ரெனிமோள் மற்றும் சிறுநீரகப் பிரிவு மருத்துவர் அருண் வர்கீஸ் ஆகியோர் பங்கேற்றனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory