» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அங்கன்வாடிகள் மூடப்படும் என்பது தவறான தகவல்: அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம்

வெள்ளி 11, ஜூலை 2025 11:59:39 AM (IST)

அங்கன்வாடி மையங்கள் மூடப்படுகிது என்பது முற்றிலும் தவறான தகவல் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "குழந்தை திருமணத்தை தடுக்க கடந்த 4 வருடங்களாக தொடர்ச்சியாக பல்வேறு விழிப்புணர்வுகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படுகிறது. 18 வயது முடிந்த பின்பு தான் பெண்களுக்கு ஆரோக்கியம் ஏற்படும். தற்போது 18 வயதிற்கு முன்பே கர்ப்பமாகிறார்கள் என்ற தகவல் வந்து கொண்டிருக்கிறது. 

அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருவதால் மருத்துவமனைக்கு செல்ல கூடாது என்ற முடிவை அவர்கள் எடுக்கின்றார்கள். ஆகவே, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். அங்கன்வாடி மையங்கள் மூடப்பவதாக தவறானது செய்தி வருகிறது. மறு சீரமைப்பு செய்வதற்கு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றோம். குறைவான குழந்தைகள் உள்ள மையங்களில் அதன் அருகே உள்ள மையங்களில் சேர்க்க திட்டமிட்டு உள்ளோம். 

மேலும் வேறு எங்கேயாவது அங்கன்வாடி மையங்கள் தேவைப்பட்டால் இந்த மையத்தை அங்கு வைப்பதற்கு ஆலோசனை மேற்கொண்டு வருகின்றோம். ஆனால் அங்கன்வாடி மையங்கள் மூடப்படுகிறது என்று கூறுவது முற்றிலும் தவறானது, மலைப்பகுதியில் 34 சென்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கன்வாடி மையங்களின் வசதி மேம்படுத்துதல், விளையாட்டு உபகரணங்கள் வாங்க அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. 6500 அங்கன்வாடி மையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory