» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தை போல் பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் : முதல்வர் பகவந்த் மான் விருப்பம்!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 11:39:35 AM (IST)

தமிழகத்தை போல் பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவர விரும்புகிறேன் என்று அந்த மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்தார்.
சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற காலை உணவுத் திட்டம் விரிவாக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று கலந்துகொண்டார். இந்த நிகழ்வில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து திட்டத்தை தொடங்கிவைத்த பகவந்த் மான், மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய பகவந்த் மான் பேசியதாவது: ”காலை உணவுத் திட்டம் போல் சிறந்தது வேறெதுவும் இல்லை. பசியுடன் வரும் குழந்தைகளால் படிக்க முடியாது. தமிழகத்தை போல் பஞ்சாபிலும் காலை உணவுத் திட்டத்தை கொண்டுவர விரும்புகிறேன். சுமார் 18 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவது என்பது மிகப்பெரிய சாதனை. குழந்தைகளின் உடல்நலத்தில் மாநில அரசு அக்கறை கொண்டுள்ளது.
பஞ்சாபில் அனைத்து நகரங்களிலும் தென்னிந்திய உணவுகளான உப்புமா, தோசை போன்றவை விற்கப்படுகிறது. தென்னிந்திய உணவுகள் தேசிய உணவு போல், நாடு முழுவதும் விற்கப்படுகிறது. பஞ்சாப் உணவுகள் தமிழகத்திலும் விற்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. கல்வி, சுகாதாரத்துக்கு பஞ்சாப் அரசும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. ஆம் ஆத்மி கிளினிக்களில் 70,000 பேர் நாள்தோறும் இலவசமாக சிகிச்சை பெறுகிறார்கள்.
நாளையே பஞ்சாப் அமைச்சரவையில் காலை உணவுத் திட்டம் குறித்து விவாதிக்கவுள்ளேன். குழந்தைகள்தான் நாட்டின் எதிர்காலம், அவர்களால்தான் நாடு முன்னேறும். அப்போதுதான் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க முடியும், வெறும் பேச்சுகளால் முடியாது.” எனத் தெரிவித்தார். மேலும், பஞ்சாப் என்பது பகத்சிங், ராஜகுரு போன்றவர்கள் வீர மரணம் அடைந்த மண், அதனை பார்க்க நீங்கள் கண்டிப்பாக வர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் செப்.5ஆம் தேதி மது விற்பனைக்கு தடை: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:40:17 PM (IST)

மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் : சசிகாந்த் எம்பியுடன் ராகுல் பேச்சு!
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:31:11 PM (IST)

பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு: 40 டன் குப்பைகள் அகற்றம்
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:02:28 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அதிகாரிகளின் முறையற்ற செயல் : முருக பக்தர்கள் குமுறல்!
திங்கள் 1, செப்டம்பர் 2025 10:48:43 AM (IST)

தூத்துக்குடியை எழில்மிகு சுகாதாரமான மாநகராக மாற்றுவேன்: ஆணையர் பிரியங்கா பேட்டி!
திங்கள் 1, செப்டம்பர் 2025 10:21:01 AM (IST)

சமூக வலைதளத்தில் சினிமா பாடல் மூலம் அச்சுறுத்திய ரவுடிக்கு போலீசார் நூதன தண்டனை
திங்கள் 1, செப்டம்பர் 2025 8:19:07 AM (IST)
