» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவையில் 2ஆயிரம் கிலோ வெடிமருந்து பறிமுதல்: பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை!
செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 11:52:48 AM (IST)

கோவை அருகே 2 ஆயிரம் கிலோ ஜெலட்டின் வெடி மருந்து கடத்திச் சென்ற வேன் சிக்கிய சம்பவத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் பயங்கரவாத செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து கைது செய்யவும், தமிழக அரசு சார்பில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவையில் இருந்து வேன் மூலம் கேரளத்துக்கு ஜெலட்டின் வெடிபொருள் கடத்தப்படுவதாக இன்று அதிகாலை பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜெலட்டின் கடத்திச் செல்லும் வேனைப் பிடிக்க அதிரடி நடவடிக்கையில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் இறங்கினர். இன்று அதிகாலை 4 மணியளவில் கேரளத்தை நோக்கிச் சென்ற வேனை மதுக்கரை அருகே பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
வேனில் சோதனை செய்ததில் ஜெலட்டின் குச்சிகள் பெட்டி பெட்டியாக இருந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இவற்றின் மொத்த எடை 2 ஆயிரம் கிலோ இருக்கும் என முதல்கட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக ஜெலட்டின் வெடி மருந்து குச்சிகள் கடத்தப்பட்ட வேனை மதுக்கரை காவல் நிலையத்துக்கு பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கொண்டு சென்றனர்.
வேனை ஒட்டிச் சென்ற ஓட்டுநர் சுபேரையும் கைது செய்து மதுக்கரை காவல் துறையினர் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கேரளத்தில் உள்ள கல்குவாரிக்கு மலைகளை உடைக்க பயன்படுத்துவதற்காக ஜெலட்டின் வெடி மருந்து குச்சிகள் கொண்டு செல்லப்பட்டதாக ஓட்டுநர் சுபேர் தெரிவித்துள்ளார்.
இதற்கு உரிமம் உள்ளதா?, 2 ஆயிரம் கிலோ வெடி மருந்து ஜெலட்டின் குச்சி கொண்டு செல்ல உரிய ஆவணங்கள் உள்ளதா என்று விசாரணை நடைபெறுகிறது. மேலும் அதன் உரிமையாளர் குறித்தும் விசாரணை நடக்கிறது. இன்று அதிகாலை நடந்த இந்த சம்பவம் மதுக்கரை அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் செப்.5ஆம் தேதி மது விற்பனைக்கு தடை: டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:40:17 PM (IST)

மத்திய அரசுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் : சசிகாந்த் எம்பியுடன் ராகுல் பேச்சு!
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:31:11 PM (IST)

பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைப்பு: 40 டன் குப்பைகள் அகற்றம்
திங்கள் 1, செப்டம்பர் 2025 12:02:28 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அதிகாரிகளின் முறையற்ற செயல் : முருக பக்தர்கள் குமுறல்!
திங்கள் 1, செப்டம்பர் 2025 10:48:43 AM (IST)

தூத்துக்குடியை எழில்மிகு சுகாதாரமான மாநகராக மாற்றுவேன்: ஆணையர் பிரியங்கா பேட்டி!
திங்கள் 1, செப்டம்பர் 2025 10:21:01 AM (IST)

சமூக வலைதளத்தில் சினிமா பாடல் மூலம் அச்சுறுத்திய ரவுடிக்கு போலீசார் நூதன தண்டனை
திங்கள் 1, செப்டம்பர் 2025 8:19:07 AM (IST)
