» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் வினியோகம்: தமிழக அரசு உத்தரவு

செவ்வாய் 26, ஆகஸ்ட் 2025 8:13:45 PM (IST)

சுபமுகூர்த்த தினமான 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதலாக டோக்கன்கள்  ஒதுக்கீடு செய்ய  தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆவணி மாத சுபமுகூர்த்த தினமான 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் (டோக்கன்) ஒதுக்கீடு செய்ய வேண்டுமென பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்தது. இதையேற்று, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு சார்​ப​தி​வாளர் உள்ள அலு​வல​கங்​களுக்கு 100-க்கு பதில் 150 முன்​ப​திவு டோக்​கன்​கள், 2 சார் பதி​வாளர் உள்ள அலு​வல​கங்​களுக்கு 200-க்கு பதில் 300 முன்​பதிவு டோக்​கன்​கள், அதிக அளவில் பத்​திரப்​ப​திவு​கள் நடை​பெறும் 100 அலு​வல​கங்​களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்களு​டன், கூடு​தலாக 4 தட்​கல் டோக்​கன்​களும் மக்​கள் பயன்​பாட்​டுக்​காக வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory