» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்நாட்டின் டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு: பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கட்ராமன் நியமனம்!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:48:44 PM (IST)
தமிழகத்தின் காவல் துறை தலைமை இயக்குநராக (பொறுப்பு) ஜி. வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளார். நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஜி. வெங்கட்ராமன், 1994 ஆம் ஆண்டின் தமிழ்நாடு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாகத் தேர்வானவர்.
இளங்கலை பொருளாதாரம், முதுகலை பொது நிர்வாகம் முடித்த இவர், 1996 ஆம் ஆண்டு திருச்செந்தூரில் பணியைத் தொடங்கினார். 1996 -ல் உதவி காவல் கண்காளிப்பாளராக (ஏஎஸ்பி) திருச்செந்தூரில் பணியாற்றினார். 1997-ல் கோவில்பட்டி, ராமநாதபுரம் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார்.
1998 ஆம் ஆண்டு காவல் கண்காணிப்பாளரனதும் மத்திய அரசின் உளவுப் பிரிவு பணிக்குச் சென்று, தமிழகம் திரும்பினார். 2001 ஆம் ஆண்டு சென்னை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். 2008 ஆம் ஆண்டு டிஐஜியாக பதவி உயர்வு பெற்றார்.
2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல் துறையில் சிபிசிஐடி டிஐஜியாக இருந்தார். 2012-ல் ஐஜியாக பதவி உயர்வு பெற்றார். 2019ஆம் ஆண்டு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்று, சைபர் கிரைம், தலைமையகம், நிர்வாகப் பணிகளில் பணியாற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 2 வீடுகளில் 31 பவுன் நகை கொள்ளை : போலீசார் விசாரணை!
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 1:22:25 PM (IST)

தூத்துக்குடியில் வரத்துக் குறைவால் மீன்கள் விலை உயர்வு: மீனவர்கள் மகிழ்ச்சி
ஞாயிறு 31, ஆகஸ்ட் 2025 9:28:03 AM (IST)

விஜயை நேரில் பார்த்தால் முகத்தில் ஓங்கி குத்துவேன்: நடிகர் ரஞ்சித் சர்ச்சை பேச்சு!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:28:44 PM (IST)

ஏற்றுமதி தொழில்களைப் பாதுகாக்க புதிய கொள்கை : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!
சனி 30, ஆகஸ்ட் 2025 5:00:42 PM (IST)

மூப்பனார் பிரதமராவதை தடுத்தது தமிழகத்துக்கு நடந்த துரோகம்: நிர்மலா சீதாராமன் பேச்சு!
சனி 30, ஆகஸ்ட் 2025 4:12:31 PM (IST)

கன்னியாகுமரியில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்: 30 பேருக்கு பணி ஆணைகள்!
சனி 30, ஆகஸ்ட் 2025 3:54:19 PM (IST)
