» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி : நெல்லை சரக டிஐஜி முதலிடம்!

செவ்வாய் 16, செப்டம்பர் 2025 8:10:00 PM (IST)



வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் நடைபெற்ற காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் (பொறுப்பு)  சந்தோஷ் ஹடிமணி  முதலிடம் பிடித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துப்பாக்கி சுடுதளத்தில் நேற்று (15.09.2025) மற்றும் இன்று (16.09.2025) ஆகிய இரண்டு நாட்கள் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும்போட்டி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்  முன்னிலையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பொறுப்பு  சந்தோஷ் ஹடிமணி  தலைமையில் நடைபெற்றது.

இப்போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டம் மற்றும் திருநெல்வேலி நகரம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 9,11, மற்றும் 12வது பட்டாலியனைச் சேர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்/காவல் ஆணையர் உட்பட காவல் உதவி ஆணையர், துணை ஆணையர், காவல் உதவி கண்காணிப்பாளர், காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள் என மொத்தம் 26 காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் பிஸ்டல்(Pistol) அல்லது ரிவால்வர் (Revolver) ரக துப்பாக்கி மற்றும் இன்சாஸ்(Insas) ரக துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பிஸ்டல்(Pistol) அல்லது ரிவால்வர் (Revolver) ரக துப்பாக்கி சுடும் பிரிவில் திருநெல்வேலி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  முருகன்  முதலிடத்தையும், திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பொறுப்பு  சந்தோஷ் ஹடிமணி  2வது இடத்தையும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்  3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

அதே போன்று இன்சாஸ் (Insas) ரக துப்பாக்கி சுடும் பிரிவில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பொறுப்பு  சந்தோஷ் ஹடிமணி  மற்றும் கன்னியாகுமாரி மாவட்டம் குளச்சல் உட்கோட்ட காவல் உதவ கண்காணிபபாளர் ரேகா நங்லாட் ஆகிய இருவரும் முதலிடத்தையும், திருநெல்வேலி மாநகர பாளையங்கோட்டை காவல் உதவி ஆணையர்  சுரேஷ் மற்றும் கன்னியாகுமாரி பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்  இளஞ்செழியன் ஆகிய இருவரும் 2வது இடத்தையும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்  3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

ஒட்டுமொத்த துப்பாக்கி சுடும் போட்டியில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பொறுப்பு  சந்தோஷ் ஹடிமணி  முதலிடத்தையும், திருநெல்வேலி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்  முருகன்  2வது இடத்தையும், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான்  3வது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பொறுப்பு  சந்தோஷ் ஹடிமணி  பரிசு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மேற்பார்வையில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர்  சுனைமுருகன் உள்ளிட்ட காவல்துறையினர் செய்திருந்தனர். இந்நிகழ்வின்போது கமாண்டோ படை பிரிவின் காவல்துறை கூடுதல் கண்காணிக்காளர்  ஸ்டீபன் ஆகியோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory