» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேசிய ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி: ஆட்சியர் ஆர்.அழகுமீனா துவக்கி வைத்தார்!

புதன் 17, செப்டம்பர் 2025 4:21:01 PM (IST)



தேசிய ஆயுர்வேத தினம் மற்றும் உலக நோயாளிகளின் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு  விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா   கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 10 -வது தேசிய ஆயுர்வேத தினம் மற்றும் உலக நோயாளிகளின் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு  நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பு பிரிவு மற்றும் நிர்வாக குழு சார்பில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா,    இன்று (17.09.2025) கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில்- 10 -வது தேசிய ஆயுர்வேத தினம் மற்றும் உலக நோயாளிகளின் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு  நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனை மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி, இன்று துவக்கிப்பட்டுள்ளது.

இப்பேரணியில்  நோயாளிகளின் பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள், சுய மருத்துவத்தினால் வரும் பாதிப்புகள், ஆயுர்வேத மருந்துகள் இயற்கையானவை எனவே மருத்துவரின் ஆலோசனை தேவையில்லை என்று பொதுமக்களிடையே நிலவி வரும் தவறான நம்பிக்கை  தவறாக வழிகாட்டும் மருத்துவம் சார்ந்த போலியான விளம்பரங்களுக்கு விழிப்பாக இருங்கள். மருந்துகளை மருத்துவர் ஆலோசனை படி உட்கொண்டு எதிர்மறை விளைவுகளை தவிர்ப்போம் முதலிய விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகள் ஏந்தி பொதுமக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இப்பேரணியானது கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து துவங்கி வேப்பமூடு சந்திப்பு வழியாக கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியை வந்து அடையும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா   தெரிவித்தார்.

பேரணியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கு.சுகிதா (பொது), கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மருத்துவமனை கல்லூரி முதல்வர் ஜெ.கிளாரன்ஸ் டேவி, கல்லூரி இணை பேராசிரியர் ஜெயகிருஷ்ணன், மருத்துவ கண்காணிப்பு அலுவலர் டோமின், மருத்துவர்கள் கல்லூரி மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory