» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி மாவட்ட ஆட்சியரை கண்டித்து கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டம்!
செவ்வாய் 25, நவம்பர் 2025 5:23:14 PM (IST)
கன்னியாகுமரியில், எஸ்ஐஆர் பணிகளை விரைந்து முடிக்குமாறு ஆட்சியர் தரக்குறைவாக பேசுவதாக கூறி கிராம நிர்வாக அதிகாரிகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் S.I.R (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கூறி கிராம நிர்வாக அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதாகவும் மேலும் ஒரு அதிகாரியின் கைபேசியை பிடுங்கி எறிந்து அநாகரீகமாக பேசியதாகவும் கூறி கிராம நிர்வாக அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நாங்கள் எஸ் ஐ ஆர் (S.I.R) பணிகளை வேகமாக செய்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் தனது பெயரை முன்னிறுத்திக்கொள்ள தங்களை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும் அதிக பணிச்சுமை தங்களுக்கு வழங்கி வருவதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்தில் 27-ம் தேதி இணைகிறார் கே.ஏ.செங்கோட்டையன்..!
செவ்வாய் 25, நவம்பர் 2025 3:31:11 PM (IST)

சுபமுகூர்த்த தினம்: சார் பதிவாளர் அலுவலகங்களில் நவ.27ம் தேதி கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு!
செவ்வாய் 25, நவம்பர் 2025 3:17:58 PM (IST)

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: சென்னை உள்பட 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!
செவ்வாய் 25, நவம்பர் 2025 3:13:27 PM (IST)

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் படிப்படியாக மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
செவ்வாய் 25, நவம்பர் 2025 12:52:31 PM (IST)

தமிழ்நாட்டில் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம்
செவ்வாய் 25, நவம்பர் 2025 11:40:12 AM (IST)

கரூர் துயர சம்பவம்: தவெக நிர்வாகிகளிடம் 2வது நாளாக சி.பி.ஐ. விசாரணை!
செவ்வாய் 25, நவம்பர் 2025 11:07:23 AM (IST)




