» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அம்ரித் பாரத் திட்டப் பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும் : கூடுதல் கோட்ட மேலாளர் தகவல்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:56:21 AM (IST)

திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டப் பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும் என மதுரை கூடுதல் கோட்ட மேலாளர் எல். நாகேஷ்வர ராவ் தெரிவித்தார்.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளை, தெற்கு ரயில்வே, மதுரை கோட்ட மேலாளர் நாகேஷ்வர ராவ் நேற்று ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வரை ரயில் நிலையங்களில் நடைமேடைகளை விரிவுபடுத்தும் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன.
அம்ரித் பாரத் திட்டப் பணிகள் 2026 மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும். வந்தே பாரத் ரயில் சேவையை திருச்செந்தூர் வரை நீட்டிப்பதற்கு பயணிகள் வைத்த கோரிக்கை பரிசீலனை செய்யப்படும். திருச்செந்தூர்-சென்னை நேர்வழி ரயில் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர்கள் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம்: ஆட்சியருடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வாக்குவாதம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 5:07:32 PM (IST)

தமிழகத்தில் ரூ.69 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டு அரங்கம்: முதல்வர் அடிக்கல் நாட்டினார்!
திங்கள் 8, டிசம்பர் 2025 5:02:03 PM (IST)

முக்தாரை கைது செய்யாவிட்டால் போராட்டம் நடத்துவோம் : சரத்குமார் எச்சரிக்கை!
திங்கள் 8, டிசம்பர் 2025 4:03:30 PM (IST)

நீதிபதி தீர்ப்பிற்கு எதிராக கோஷம் எழுப்பிய தி.மு.க எம்.எல்.ஏ மகன்: விமான நிலையத்தில் பரபரப்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 11:25:39 AM (IST)

குமரி மாவட்டத்தில் 40 புதிய மகளிர் விடியல் பேருந்துகள்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
திங்கள் 8, டிசம்பர் 2025 11:07:49 AM (IST)

குமரி பேராயர் கிறிஸ்டோபர் விஜயன் பதவியேற்பு விழா : பிரதம பேராயர் ரூபன் மார்க் பங்கேற்பு
திங்கள் 8, டிசம்பர் 2025 10:37:57 AM (IST)


