» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும் : கனிமொழி எம்.பி

திங்கள் 22, டிசம்பர் 2025 5:04:28 PM (IST)



தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திமுக தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும் என்று கனிமொழி எம்.பி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முதல் கூட்டம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கனிமொழி எம்.பி தலைமையில் நடைபெற்றது. 

இதன் பின்னர் கனிமொழி எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; ”வரவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கை குழுவை உருவாக்கி உள்ளார். தேர்தல் அறிக்கை என்பது முதலமைச்சரின் ஆலோசனை பெற்று, தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உருவாக்கப்படும். 

குறிப்பாக, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள், மகளிர் உரிமைகள், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் பூமிப் பந்தை பாதுகாப்பது, விவசாயிகள் பாதுகாப்பு, ஒன்றிய அரசு மக்களிடமிருந்து வேலைவாய்ப்புகளை பறிப்பதையே ஒரு வேலையாக செய்து கொண்டிருக்கும் இச்சூழலில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, மாநில உரிமைகளுக்காகப் போராடுவது போன்ற அம்சங்கள் நிச்சயமாக தேர்தல் அறிக்கையின் மையமாக இருக்கும்." என்று பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory