» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரியில் ரூ.91.20 கோடி நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சனி 7, மார்ச் 2026 11:10:09 AM (IST)



கன்னியாகுமரியில் ரூ.91.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார் 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, 7,601 பயனாளிகளுக்கு ரூ.72.64 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

மேலும், ரூ.18.38 கோடி மதிப்பிலான 131 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், முடிவுற்ற பணிகளையும் திறந்து வைத்தார். விழாவில் ஊரக வளர்ச்சி மற்றும் பேரூராட்சித் துறைகளின் சார்பில் சாலை மேம்பாடு மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட 126 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், வனத்துறை சார்பில் பழங்குடியின இளைஞர்களுக்காக 'காணி தொல்குடி பயிற்சி மையம்' திறந்து வைக்கப்பட்டது.

பால்வளத்துறை அமைச்சர்  த.மனோ தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில உணவு ஆணையத்தலைவர்  என்.சுரேஷ்ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள்  ராஜேஷ்குமார்,  ஜே.ஜி.பிரின்ஸ், முனைவர் தாரகை கத்பர்ட், நாகர்கோவில் மாநகராட்சி மேயர்  ரெ.மகேஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory