» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்: தனியார் நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சம் அபராதம்
சனி 21, மார்ச் 2026 8:34:28 AM (IST)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில், பணி நேரத்தின்போது விதிகளை மீறி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய தனியார் பாதுகாப்பு நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து கோயில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த மார்ச் 3-ஆம் தேதி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனப் பணியாளர்கள், தங்களது மேலாளரின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். இதற்காகக் கோயில் வளாகத்தில் உள்ள பொது தரிசன வரிசை கட்டடத்தைப் பணி நேரத்தில் தவறாகப் பயன்படுத்தியதுடன், அங்கு கேக் வெட்டியும் கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: விதிமீறல்: மார்ச் 3-ஆம் தேதி சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதியம் 1.30 மணிக்குக் கோயில் நடை சாத்தப்பட்டது. அப்போது இரண்டாம் ஷிப்ட் பணிக்கு வந்த ஊழியர்கள், மதியம் 2.30 மணியளவில் தரிசன வரிசை கட்டடத்தின் அறை எண் 5-இல் ஒன்றுகூடி, மாலைகள் மற்றும் பொன்னாடைகள் அணிவித்துத் தங்கள் மேலாளரின் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர்.
ஒப்புதல்: இது குறித்துக் கோயில் நிர்வாகம் விளக்கம் கேட்டபோது, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் இந்த விதிமீறலை ஒப்புக்கொண்டது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 4 பணியாளர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், பங்கேற்ற மற்ற ஊழியர்களுக்கு அன்றைய நாள் சம்பளம் அபராதமாகப் பிடிக்கப்பட்டதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.
இருப்பினும், புனிதமான கோயில் வளாகத்தில் இத்தகைய தவறுகள் மீண்டும் நிகழாமல் இருக்க, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கக் கோயில் இணை ஆணையர் பரிந்துரைத்தார். இதனைத் தக்கார் ஏற்று உறுதி செய்ததைத் தொடர்ந்து, அந்நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு: ஏப்.17 முதல் கோடை விடுமுறை!
வெள்ளி 20, மார்ச் 2026 8:20:18 PM (IST)

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு புதிய நிர்வாகிகள் நியமனம்!
வெள்ளி 20, மார்ச் 2026 5:49:41 PM (IST)

திமுக அரசின் அலட்சியத்தால் மக்கள் பலியாக வேண்டுமா? - நயினார் நாகேந்திரன் சாடல்!
வெள்ளி 20, மார்ச் 2026 5:12:22 PM (IST)

அரசுப் பேருந்து மோதி கோர விபத்து : 11 மாதக் குழந்தை உட்பட 8 பேர் உயிரிழப்பு!
வெள்ளி 20, மார்ச் 2026 3:41:14 PM (IST)

கூட்டணியில் புதிய கட்சிகள் எதுவும் இணைய வாய்ப்பில்லை: எடப்பாடி பழனிசாமி பேட்டி
வெள்ளி 20, மார்ச் 2026 12:44:44 PM (IST)

மாணவி கொலை வழக்கில் கைதானவருக்கு உச்சபட்ச தண்டனை உறுதி! - கனிமொழி எம்.பி கருத்து!
வெள்ளி 20, மார்ச் 2026 12:00:00 PM (IST)

