» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கிணற்றில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு : கோவில்பட்டி அருகே சோகம்
திங்கள் 23, மார்ச் 2026 8:08:23 AM (IST)
கோவில்பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற சிறுவன், எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சரமாரி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் மனோஜ் (17). இவர் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, கோவில்பட்டி - கடலையூர் சாலையில் லிங்கம்பட்டி விலக்கு அருகேயுள்ள ஒரு தனியார் கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.
நண்பர்களுடன் உற்சாகமாகக் குளித்துக் கொண்டிருந்தபோது, மனோஜ் திடீரென கிணற்றின் ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், உடனடியாகத் தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள், கிணற்றில் இறங்கி நீண்ட நேரம் தேடினர். இறுதியில் மனோஜின் உடலைச் சடலமாக மீட்டனர். நாலாட்டின்புதூர் போலீசார் மனோஜின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீர்நிலைகளில் குளிப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தல்
விபத்து நடந்த இடத்தை கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜகநாதன் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் பாதுகாப்பு வசதிகள் இல்லாத கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெற்றி பெற வேண்டி குவியும் அரசியல் பிரமுகர்கள் : களைகட்டும் திருச்செந்தூர் முருகன் கோயில்!
திங்கள் 23, மார்ச் 2026 3:44:24 PM (IST)

அனைவரும் திருப்தியடையும் வகையில் தொகுதிப் பங்கீடு அமையும்: பியூஷ் கோயல் உறுதி!
திங்கள் 23, மார்ச் 2026 12:41:53 PM (IST)

மதுபோதையில் மயங்கிய கேட் கீப்பர்கள்: நடுவழியில் நிறுத்தப்பட்ட வந்தே பாரத் ரயில்!
திங்கள் 23, மார்ச் 2026 12:39:34 PM (IST)

பாஜக தலைமை மீது சரத்குமார் அதிருப்தி: அடுத்தகட்ட முடிவை அறிவிப்பதாக எச்சரிக்கை
திங்கள் 23, மார்ச் 2026 12:12:38 PM (IST)

ரயில் மீது கல் வீசினால் 10 ஆண்டு சிறை அல்லது ஆயுள் தண்டனை: தெற்கு ரயில்வே கடும் எச்சரிக்கை!
திங்கள் 23, மார்ச் 2026 10:56:17 AM (IST)

தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க நாம் வென்றாக வேண்டும் - அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு!
திங்கள் 23, மார்ச் 2026 10:49:13 AM (IST)

