» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ராமதாஸ் மனு தள்ளுபடி: மாம்பழம் சின்னத்தை முடக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 4:46:28 PM (IST)
பாட்டாளி மக்கள் கட்சியின் 'மாம்பழம்' சின்னத்தை முடக்கக்கோரி ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் நடைமுறைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த மனு ஏற்புடையது அல்ல என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.பாமகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல் மற்றும் உரிமையியல் வழக்குகள் முடியும் வரை, கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 'மாம்பழம்' சின்னத்தை முடக்கி வைக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே இந்த மனுவைச் சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த மார்ச் 26-ம் தேதி தள்ளுபடி செய்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள்:
தேர்தல் ஆணையம்: "சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிட்டன. இந்தச் சூழலில் சின்னத்தை முடக்கக் கோருவது சட்டப்படி செல்லத்தக்கது அல்ல."
அன்புமணி தரப்பு: "ராமதாஸ் தரப்பு வேட்பாளர்களுக்கு ஏற்கனவே 'சிலிண்டர்' சின்னம் ஒதுக்கப்பட்டு, அவர்களும் அதை ஏற்றுக்கொண்டுள்ளனர். தந்தைக்கு எதிராக எந்தச் செயல்பாடும் இல்லை."
வடிவேல் ராவணன் தரப்பு: "பொதுக்குழுவைக் கூட்டாமல் ராமதாஸ் தன்னிச்சையாகத் தலைவராக அறிவித்துக் கொண்டார்."
ராமதாஸ் தரப்பு: "நிர்வாகக் குழு முடிவின்படியே ராமதாஸ் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் ஆணையம் மனுவைப் பரிசீலிக்காததால் நீதிமன்றத்தை நாட வேண்டியிருந்தது."
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுத் தேர்தல் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால், இந்த நேரத்தில் சின்னத்தை முடக்க முடியாது எனக் கூறி ராமதாஸ் தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்தனர். இந்தத் தீர்ப்பு தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் அமல்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:49:01 PM (IST)

தேர்தல் விதிமீறல்களை உடனுக்குடன் தெரிவிக்க உத்தரவு: நுண் பார்வையாளர்களுக்குத் பயிற்சி!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:13:27 PM (IST)

காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:08:02 PM (IST)

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடக்கும் போது கனிமொழி மவுனம் காப்பது ஏன்? - குஷ்பு கேள்வி
வெள்ளி 10, ஏப்ரல் 2026 11:52:18 AM (IST)

ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை: வாக்குப்பதிவு அதிகரிப்பு குறித்து பாஜக வரவேற்பு!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 11:44:05 AM (IST)

கடலூரில் விஜய் நாளை பிரச்சாரம்: உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 11:35:20 AM (IST)

