» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மனைவி பிரிந்து சென்றதால் விபரீத முடிவு: ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை!
புதன் 13, மே 2026 8:46:09 AM (IST)
கயத்தாறு அருகே குடும்பத் தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்ற மன உளைச்சலில் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நாகலாபுரம் கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்த விவசாயி பூலையாத்தேவர் என்பவரது மகன் வெயில்முத்து (48). இவர் கயத்தாறில் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு சேர்மத்தாய் என்ற மனைவியும், மல்லிகை மற்றும் முத்துராஜ் ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.
வெயில்முத்துவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட மோதலால், சேர்மத்தாய் தனது குழந்தைகளுடன் கணவரை விட்டுப் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். தன்னுடன் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு வெயில்முத்து தனது மனைவியை அழைத்துள்ளார்.
ஆனால், மதுப் பழக்கத்தைக் காரணம் காட்டி அவர் வர மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதில் கடும் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட வெயில்முத்து, நேற்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரமாக வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், ஜன்னல் வழியாகப் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் காந்திராஜன் ஆகியோர் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருவள்ளூரில் 3 வயது குழந்தை பாலியல் படுகொலை சம்பவம்: காவல்துறை விளக்கம்
திங்கள் 15, ஜூன் 2026 12:50:36 PM (IST)

கப்பல் கட்டும் தளம் திட்டத்தில் முதல்வர் சரியான முடிவெடுப்பார்: தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் பேட்டி!
திங்கள் 15, ஜூன் 2026 12:38:31 PM (IST)

ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை விடுவிப்பு : தவெக ஆட்சியில் 2வது முறை!
திங்கள் 15, ஜூன் 2026 12:33:25 PM (IST)

3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை படுகொலை - தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!
திங்கள் 15, ஜூன் 2026 12:30:12 PM (IST)

உயிரிழந்த கணவரின் சடலத்துடன் 3 நாட்களாக வீட்டிற்குள் முடங்கிய மனைவி, மகள்!
திங்கள் 15, ஜூன் 2026 12:27:22 PM (IST)

கவின் கொலை வழக்கில் 2வது குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியதற்கு கடும் எதிர்ப்பு - தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!
திங்கள் 15, ஜூன் 2026 12:22:57 PM (IST)


