» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
முன்னாள் போலீஸ் டி.ஜி.பியுடன் திருமாறன் சந்திப்பு
ஞாயிறு 31, மே 2026 9:48:26 PM (IST)

தமிழகத்தின் முன்னாள் போலீஸ் டி.ஜி.பி யுடன் சமூக நல ஆர்வலர் வெங்காடம்பட்டி பூ. திருமாறன் சந்தித்து பசுமை பயணம் குறித்து விளக்கினார்.
போலீஸ் வட்டாரத்தில் டி.கே.ஆர் என்றழைக்கப்படுபவர் டி. கே.ராஜேந்திரன். தமிழக போலீஸ் டி.ஜி.பியாக இருந்தவர். நிறைய புத்தகங்கள் படிப்பார். அவரிடம் பிறர் படிக்க வேண்டியது எளிமை. தற்போது தமிழக தடகளச் சங்கத்தின் தலைவராக வால்டர் தேவாரத்தை தொடர்ந்து விளங்குகிறார். டி.கே ராஜேந்திரனை சமூக நல ஆர்வலர் வெங்காடம் பட்டி பூ.திருமாறன் சந்தித்து தமது சேவைகள் குறித்து விளக்கினார். முக்கியமாக தற்போது தமிழகத்தில் நாலாதிசையிலும் எதிரொலிக்கும் விதைப்பந்து புரட்சி குறித்து விளக்கினார்.
விதைப்பந்து தயாரிப்பில் ஈடுபடும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் சான்றிதழ்களின் மாதிரிகளை திருமாறன் போலீஸ் டி.ஜி.பி டிகே ஆருக்கு வழங்கினார். வீசிய விதைப்பந்துகளால் பூமியின் மர எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கும். அதைவிட மரம் வளர்க்கும் எண்ணம் மாணவ மாணவிகளிடம் நிச்சயம் துளிர்விடும் என திருமாறன் கூறியதை டி. கே.ஆர் ஆமோதித்தார். இந்த சந்திப்பின்போது பசுமை ஜவஹர் உடன் இருந்தார். ஜூன் மாதம் பள்ளிகள் திறந்தவுடன் விதைப்பந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை மீண்டும் துவங்கிட திட்டமிடப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிப்பணிகள் ஆய்வுக்கூட்டம் : அமைச்சர்கள் ஸ்ரீநாத், மதன் ராஜா பங்கேற்பு!
திங்கள் 1, ஜூன் 2026 8:37:29 PM (IST)

சிங்கப்பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத தவெக ஆட்சி தூய சக்தியா? நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
திங்கள் 1, ஜூன் 2026 5:54:36 PM (IST)

ஊழல், லஞ்சமில்லாத ஆட்சியை வழங்குவேன்: திருச்சியில் முதல்வர் ஜோசப் விஜய் பேச்சு!
திங்கள் 1, ஜூன் 2026 5:40:35 PM (IST)

முதல்வர் விஜய்யை வரவேற்றது ஏன்? துரை வைகோ விளக்கம் - கூட்டணி குறித்து ஜூன் 27ல் முடிவு!
திங்கள் 1, ஜூன் 2026 5:29:35 PM (IST)

நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
திங்கள் 1, ஜூன் 2026 5:18:18 PM (IST)

தாயுமானவர் திட்டத்தை தொடர தவெக அரசு முடிவு: நாளை முதல் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்!
திங்கள் 1, ஜூன் 2026 4:58:34 PM (IST)


