» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்செந்தூரில் கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்கள்; பக்தர்கள் பாதுகாப்பாக நீராட அறிவுறுத்தல்!
வியாழன் 11, ஜூன் 2026 7:38:26 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரைப் பகுதியில் பெருமளவிலான ஜெல்லி மீன்கள் அலைகளால் அடித்து வரப்பட்டுக் கரை ஒதுங்கின. இதனால் கடலில் புனித நீராடும் பக்தர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு கோவில் நிர்வாகம் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கடலில் புனித நீராடிய பின்னரே, கோவிலுக்குள் சென்று மூலவரைத் தரிசனம் செய்வது தொன்றுதொட்டு வரும் ஆன்மீக வழக்கமாகும். இதனால் திருச்செந்தூர் கடற்கரையில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும்.
இந்நிலையில், நேற்று புதன்கிழமை அதிகாலை முதலே திருச்செந்தூர் கோவில் ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் வழக்கத்திற்கு மாறாக ஏராளமான ஜெல்லி மீன்கள் (சொறி முட்டைகள்) கடல் அலைகளின் சீற்றம் காரணமாகக் கரை ஒதுங்கத் தொடங்கின. கடலில் குளித்துக் கொண்டிருந்த சில பக்தர்களின் உடலில் இந்த ஜெல்லி மீன்கள் எதிர்பாராதவிதமாகப் பட்ட உடனே, அவர்களுக்குக் தோலில் கடுமையான நமநமப்பும், தீராத ஊரலும் (அரிப்பு) ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு கரையினுள் ஓடி வந்தனர்.
இது குறித்துத் தகவல் அறிந்த கடற்கரைப் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கடலோரப் பகுதிகளில் ஆங்காங்கே ஆபத்தான முறையில் கரை ஒதுங்கிக் கிடந்த ஜெல்லி மீன்களைத் துரிதமாக அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும், கடல் அலையின் உள்வாங்கல் மற்றும் நீரோட்ட மாறுபாடுகளால் மேலும் சில ஜெல்லி மீன்கள் கடலுக்குள் மிதந்து கொண்டிருக்கலாம் என்பதால், கடலில் நீராடும் பக்தர்கள் அனைவரும் ஆழமான பகுதிக்குச் செல்லாமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தங்களது குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் கடற்கரைப் பாதுகாப்புப் பணியாளர்கள் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அறிவுறுத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருச்செந்தூர் கடற்கரைக்கு வந்த பக்தர்கள் மத்தியில் சற்றுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வெறும் கம்பமாக நிற்கும் செக்போஸ்ட் சிசிடிவி : ஆவணங்களின்றிப் பறக்கும் லாரிகள்!
சனி 13, ஜூன் 2026 9:21:41 PM (IST)

திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும்: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
சனி 13, ஜூன் 2026 12:41:39 PM (IST)

சேலத்தில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் அதிரடி கைது!
சனி 13, ஜூன் 2026 12:22:44 PM (IST)

தவெகவில் இணையும் விஜயதாரணி: பனையூர் அலுவலகத்தில் குவிந்த முக்கியப் புள்ளிகள்!
சனி 13, ஜூன் 2026 11:21:58 AM (IST)

மாணவி கொலை வழக்கு: மரண தண்டனை பெற்ற குற்றவாளி மேல்முறையீடு செய்ய மீண்டும் அவகாசம்!
சனி 13, ஜூன் 2026 10:40:05 AM (IST)

புகையிலைக்கு நாடு முழுவதும் முழுமையான தடை : மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
சனி 13, ஜூன் 2026 10:32:37 AM (IST)


