» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆசாரிபள்ளம் மருத்துவமனை சாலையில் ஆபத்தான பள்ளம்: போக்குவரத்து கடுமையாகப் பாதிப்பு!

வெள்ளி 12, ஜூன் 2026 12:36:58 PM (IST)



நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை செல்லும் சாலையில், குடிநீர் குழாய் உடைப்பைச் சரிசெய்வதற்காகத் தோண்டப்பட்ட பள்ளம் கடந்த ஒரு மாதமாகச் சீரமைக்கப்படாமல் உள்ளதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குமரி மாவட்டம், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், நோயாளிகள், அவசரச் சிகிச்சைக்கான ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அனந்தன்பாலம் பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பைச் சரி செய்வதற்காக மாநகராட்சி சார்பில் பெரிய பள்ளம் ஒன்று தோண்டப்பட்டது. 

உடைப்பு சரிசெய்யப்பட்ட பின்னரும், தோண்டப்பட்ட பள்ளத்தைச் சீரமைத்துச் சாலையை மூட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக, கடந்த ஒரு மாத காலமாக இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் இந்த வழியே வரும் வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயமும் நீடிக்கிறது.

இது குறித்துப் பலமுறை புகார் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, பணியில் அலட்சியமாக இருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி ஆணையர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory