» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

ஞாயிறு 14, ஜூன் 2026 8:19:32 PM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது, சுமார் 4 மணி நேரம் வரை நீண்ட நேரம் காத்திருந்து முருகப்பெருமானைச் சாமி தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்த பரிகாரத் தலமாகவும் ஆன்மிகத் தலமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளதாலும், நாள்தோறும் கோவிலுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை வாராந்திர விடுமுறை நாள் என்பதால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் கூட்டம் அலைமோதிக் காணப்பட்டது. பொதுமக்கள் அதிகாலையிலிருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீண்ட வரிசையில் நின்று நீராடினர். பின்னர் பொது தரிசனம் மற்றும் கட்டணத் தரிசன வரிசைகளில் சுமார் 4 மணி நேரம் வரை நீண்ட நேரம் காத்திருந்து முருகப்பெருமானைச் சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் வாகனங்கள் ஒரே நேரத்தில் அதிக அளவில் வருகை தந்ததால் திருச்செந்தூர் நகர் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வாகனங்கள் தெப்பக்குளம் அருகில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், பிரதான சாலையின் இருபக்கமும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஞாயிறு விடுமுறை நாளான இன்று வழக்கம்போல் கோவில் நடை அதிகாலை 4 மணிக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து மற்ற காலப் பூஜைகள் தங்குதடையின்றி நடைபெற்று வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory